மெக்கெய்ன் தோல்வியடைய என்ன காரணம்?

PM 1:01 Hisham Mohamed - هشام 0 Comments


உண்மையில் இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை புதுப்பித்திருக்கிறது என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மை. ரிபப்லிகன் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட பல மாநிலங்களிலும் அக்கட்சி கோட்டைவிட்டது. வெள்ளையர்களின் வாக்குகளோடு ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியான முதல் முறை.


இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் உலகத்துக்கு நல்ல பாடத்தை கற்பித்தது. இனத்தாலும் நிறத்தாலும் ஏன் ஊர்களாலும் பிளவுபட்டிருக்கும் பிளவுபடச்சொல்லும் மங்கா பசங்களுக்கு கொடுத்த சிறந்த கசையடி.


இம்முறை நடைபெற்ற தேர்தல் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்குமிடையில் நடந்த போட்டியா?


இந்த படத்தில் இருப்பது போல ஒபாமா வெள்ளை இனத்தவராகவும் மெக்கெய்ன் கற்பினத்தவராகவும் இருந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்குமா?


என்னதான் இருந்தாலும் இலங்கை இந்திய அரசியல்வாதிகளை விட அமெரிக்கர்கள் ஒரு படி மேல் என்பதை ஒபாமாவின் வெற்றிக்கு பிறகு மெக்கெய்ன் ஆற்றிய உரை உணர்த்தியிருக்கிறது. ''அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் ஒபாமா''. அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குமாறும் தன்னுடைய ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டவர் வாழ்த்துச்சொல்லவும் மறக்கவில்லை.


மெக்கெயன் இந்தியா அல்லது இலங்கை நாட்டைச்சேர்நதவராக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் 'ஒபாமா செய்தது முழுக்க மோசடி எல்லா வாக்குகளும் கள்ள வாக்குகள்."


இனி என்ன ஒபாமாவா? ஒசாமவா?