Thursday, December 10, 2009

இருக்கிறம் - அசிங்கம்

பசியில் தவிக்கும் மாடு உணவில்லாமல் போஸ்டர் சாப்பிடும் கதையாகிவிட்டது இருக்கிறம் சஞ்சிகை.

இருக்கிறம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்! 

01-15-12-2009 இதழில் 50ம் பக்கம் வந்திருக்கும் ''ஊடக மயக்கம்'' கட்டுரை இருக்கிறம் சஞ்சிகையின் நிலையை காட்டியிருக்கிறது. யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்தார் என்பதற்காக (உங்கள் சஞ்சிகையில் இருக்கும் ஒலி ஒனி ஊடகவியலாளர்கள் அப்படி இருக்கலாம்) ஒட்டுமொத்த இலத்திரனியல் ஊடகத்துறையும் இப்படித்தான் இருக்கும் என்று பிரசுரிக்க நீங்கள் யார்? 
தூசனத்தில் எழுதிக்கொடுத்தாலும் பிரசுரிப்பீர்களா? இருக்கிறமின் கீழ்த்தரமான விற்பனை தந்திரம் இது.

வரலாற்று தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எழுதியவரது அனுபவம் கேள்விக்குறியானது.
எழுதியவர் அப்படி இருந்ததற்காய் ஒட்டு மொத்த ஒலி ஒளி ஊடகத்தையும் குறி வைத்து சுடுவது பயிற்சியில்லாமல் துப்பாக்கி தொடுகிற ஒருவரின் நிலையை காட்டுகிறது. 

சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் 

யார் செய்கிறார்கள்? பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள்.

இப்போது மழைபெய்யாததற்கு இதுகூட காரணமாம் நீங்கள் வானிலை அவதான நிலையத்தில் வேலை பார்க்க வேண்டிய ஒருவர்.

அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாய லீலைகள், மந்திரங்கள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

எங்கே நடக்கிறது அதையும் சொல்லியிருக்கலாமே. எழுதி கொடுங்கள் அதையும் பிரசுரிப்பார்கள்.

மீன் மலிந்தால் சந்தைக்கு வருமே அதுபோலவாம் தற்போதைய அறிவிப்பாளர்கள் 

மலிந்து சந்தைக்கு வந்தது உங்கள் சஞ்சிகையில் வந்திருக்கும் குப்பைகள்தான். இலவச இணைப்பாய் தமன்னாவை காட்டிதான் உங்கள் சஞ்சிகை விற்பனையாகிறது. 

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?

தேவைதான். எனக்கு தேவை அத்தனை வினாடிகளும் எனக்கும் திறமையுள்ள ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமானவை.


ஆடத்தெரியாத ஒருவரின் கவலையை அரங்கேற்றிய சஞ்சிகைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  திறமையுள்ளவர்கள் எங்கும் நிலைத்து நிற்பார்கள். 


சக பதிவர் லோஷனின் பதிவு


Wednesday, November 18, 2009

கியூபாவின் கண்ணீர் கனவுகள்.

::யாவும் கற்பனை::

கொஞ்(ச)சும் மழை, காது நோகாம ஒரு பாட்டு, நெடுந்தூரம் யாருமில்லை கால் நீட்டி வண்டி ஓட்டுற சுகம் இதை விட வேற என்ன வேணும் மது?. ஆஹா பிராமதம்! சோடா புட்டிக்கு ரசிக்கவும் தெரியுதுன்னு சொன்னாள் மது. லூசுத்தனமா எதச் சொன்னாலும் ஆஹா போட நீ இருக்கும் போது செவேரோ சாதூயை மிஞ்சிடுவேன் பாரேன்னு பதில் சொன்னான் ராகுல்.


செவேரோ கியூபாவின் பிரபல கவிஞர்களில் ஒருவர். ராகுலுக்கு ஆறு வயது இருக்கும் போதே அவன் பெற்றோர் கியூபாவின் சென் நிக்கலோஸில் குடியேறிவிட்டார்கள். இவன் அடிப்படை கல்வியை பெற்றது இங்குதான். ஸ்பெய்னின் காலநித்துவத்தில் கசங்கிப்போன சுவடுகளில் இருந்து மீளாத கியூபாவைப்போல அவன் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் வருடங்கள் 19 கடந்தும் மாறவில்லை.

தாயகத்தை இன்னும் அவனுக்கு ஞாபகப்படுத்த இருக்கும் ஒரே ஒரு சொத்து மது. கம்பியில்லாமல் காற்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டே கதை சொல்லும் ஒரு வழக்கம் ராகுலுக்கு கார் வாங்கிய பிறகு.

''ரெண்டு மூனு நாளா உன்ன மாதிரியேதான்'' என்று வாய் திறந்தவன் மூடுவதற்குள் ''என்ன என் மாதிரியான்னு?'' கேட்டு முடித்தாள் மது. ''ம்ஹ்ஹ்; அழுது கிட்டே இருக்கு வானம்'' எப்பவும் அவளை கிண்டலடிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ப்ரியம்.

காலையில் எழுந்து கடன் தீர்த்து அலுவலகம் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் தவிர ராகுலுக்கு இருக்கும் ஒரே ஒரு தனிமை கில்லர் மது. அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் 40 நிமிடங்கள். இந்த இடை வெளியில் அவன் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் ஏராளம்.

''எனக்கென்ன கவலை மது ஓபீஸ் - வீடு - ஓபீஸ் வீடுபோனால் என்னை காதலிக்க டீட் டீட் டீட் டீட '' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தால் ஸ்பெனிஸ் மொழியில் ஒரு பெண் குரல்.

''நீங்கள் அழைத்த வாடிக்கையாளருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை''
தொடரும்....

Tuesday, November 10, 2009

யார் நாயகன்? கமல், மணி, ராஜா





ரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.

நாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்


.
நாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.

நாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.


கமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.

டைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...

நான் ரசித்த சில காட்சிகள்

# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது

# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.


வேலுநாயக்கரை சாரு கேள்வி கேட்கும் காட்சி



# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.

# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..

# நிறுத்தவே மாட்டீங்களா? நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........
நீங்க ரசித்ததையும் சொல்லுங்கோ.........

Sunday, November 8, 2009

ஐயோ நானில்லை மழைத்துளி !



ஞாயிறு மாலை ஜன்னலோரத்தில்

(கவிதை எழுத) தெரியாமல் ஒரு கவிதை எழுதுகிறேன்

மழையுடன் மப்பும் மந்தாரமுமாய் வானம்

என் வீட்டுச்சாலையோரம் எங்கும் ஒரே அமைதி

ரசிப்பதற்கு ஒன்றுமில்லை பஞ்சவர்ண குடைகளும் கூட

திரும்பும் போது ஒரு மழைத்துளி என் முகத்தில்

தேடினேன் எங்கிருந்து வந்ததென்று

ஆ! அங்கே ஒரு மின் கம்பம்

கம்பி நெடுவே தப்பிப் பிழைத்த சில துளிகளும்

தற்கொலை செய்து கொள்கின்றன

என்னை தேடி வந்த மழைத்துளி என்ன சொல்ல வந்தது?

நீ சொல்லாத ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நியாயமில்லாமல் காரணமில்லாமல் கனவுகள் ஆயிரம்

யாருக்கு தெரியும் யார் கண்பட்டதோ

இந்த நகரத்தில் இனி எனக்காக யார்

காதல் செய்ய யாருமில்லை

வலிகள் ன ந

க ந வாக்குறுதி

மௌனம்


தடுமாறிப்போனேன் மழைத்துளியா இது !


குறிப்பு :- மழைத்துளி எழுதியதால் காய்ந்து போயிருக்கும் தேட வேண்டாம்.

Related Posts Live for Blogs by Real