என்ன இல்லை உன்னோடு? ஏக்கம் என்ன கண்ணோடு!

PM 9:22 Hisham 0 Comments

வாழ்க்கை எத்தனை அழகான விடயங்களை நமக்கு அளித்தாலும் எப்போதும் நமது மனது இல்லாத ஒன்றையே தேடிக்கொண்டிருக்கும்.

நம்மிடம் சொற்ப வளங்களே இருக்கலாம் நமது முயற்சிகள் சிறியதாக தெரியலாம் இருப்பினும் என்ன நம்மிடம் இருக்கிறதோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி நன்றியுணர்கொண்டால், எதை நாம் விரும்புகிறேமோ வாழ்க்கை அதை இன்னும் அதிகமாக நமக்கு தரும்.

த சீக்ரட் (Secret) புத்தகத்தில் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை (The Law of Attraction) அடையும் முக்கிய காரணியாக நன்றியுணர்வே பார்க்கப்படுகிறது. 

எதிர்மறை எணண்ணங்களிலிருந்து மீளவும் உறவுகளை பலப்படுத்தவும் நன்றியுணர்வின் அபாரமான சக்தியை பயன்படுத்துங்கள்.