மக்கள் மனங்களை கவரும் அற்புதமான ரகசியம் ஒன்று!

AM 11:54 Hisham 0 Comments


Loneliness


"எல்லாம் ஒரு நாள் மாறும் உங்க பிரச்சினைகள் எல்லாம் தீரும்" என்று ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லி நம்பிக்கை கொடுப்பதில் தொடங்கி ஒரு சின்ன புன்னகை வரை சின்ன சின்ன விடயங்கள் என்று ஒருபோதும் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது நண்பர்களே.

மாயா ஏஞ்சலோ ஒரு அற்புதமான சிந்தனை சொல்றாங்க, 

"இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மக்கள் நீங்கள் சொல்வதை மறந்துவிடுவார்கள் நீங்கள் செய்ததையும் மறந்து விடுவார்கள் ஆனால் நீங்கள் அவர்களை எப்படி உணரச் செய்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்". 

உங்களுடைய ஒரு நண்பன் மிகுந்த கவலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு ஆறுதலான வார்த்தை சொல்லி மீண்டெழ நம்பிக்கை கொடுப்பது, ஒருவருடைய நல்ல பண்புகளை பாராட்டி அவரின் மதிப்பை உணரச்செய்வது அது போல ஒரு சின்ன காரியத்தின் மூலமாக ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது காலத்துக்கு உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கச்செய்யும். 

நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே மக்கள் மனங்களை கவரவும் உறவுகளிடத்தில் அன்பை வலுப்படுத்தவும் அன்புக்குரியவர்களை மேன்மையாக உணரச்செய்யுங்கள்.