ஆப்ரகாம் லிங்கன் உயிருடன் இருந்திருந்தால் இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக்கியிருக்கலாம்.

AM 11:32 Hisham Mohamed - هشام 1 Comments


ஆப்ரகபம் லிங்கனும் கிரிக்கட் களத்தடுப்பு சிந்தனையும்.

வெற்றி வானொலியின் காலை நேர நிகழ்ச்சிக்கு நல்ல சிந்தனைகளை தேடிக் கொண்டிருந்த போது நான் பார்த்த ஆப்ரகாம் லிங்கனின் சிந்தனை இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நிலையை ஞாபகப்படுத்தியது.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இந்திய அணி களத்தடுப்பில் விட்ட தவறுகள் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற தேவையை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

சரி ஆப்ரகாம் லிங்கன் எப்படி சம்பந்தப்படறார் அப்படின்னு கேட்கிறீங்களா. அவரோட சிந்தனையை தருகிறேன் அப்ப உங்களுக்கு புரியும் "You can hide some of the fielders all of the time, and all of the fielders some of the time, but you can not hide all of the fielders all of the time."


அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கட்டுகளுக்கிடையில் ஒட்டங்களை பெற எடுத்த வேகம் களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய வீரர்களின் மோசமான வெளிப்பாடுகள் 430 என்ற ஒட்ட எண்ணிக்கையை எட்ட உதவியது அவுஸ்திரேலிய அணிக்கு.


பொன்டிங் போட்டி ஆரம்பமாக கொஞ்ச நாளைக்கு முன் சில விடயங்களை ஊடகங்களோடு பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக ஆஸி வீரர்கள் விளையாடுவது 'new age' cricket என்றும் ஆஸியின் இலக்கு இந்திய அணியின் மூத்த வீரர்கள் என்றும் குறிப்பிட்டார்.(இதன் அர்த்தம் ஒரு வேளை இப்படி இருக்கலாம் ஆஸி ஒட்டங்களை குவிக்க எடுக்கும் வேகம், இந்தியாவின் களத்தடுப்பு, அல்லது இரண்டும்.) உண்மையில் பொன்டிங் சொன்னது போல ஆஸியின் ஆட்டம் 'new age' cricket தான். இந்திய அணியின் களத்தடுப்பு 90க்கு முதல் கிரிக்கட்டை ஞாபகப்படுத்துகிறது.

லிங்கனின் சிந்தனை அது இனி என் சிந்தனை முதல் நாள் ஆட்டத்தின் போது 90 ஓவர்கள் வீசப்பட்டன. ஏன் 100 ஓவர்கள் வீசக் கூடாது போட்டி ஆரம்பமானதோ 9.30க்கு நிறைவடைந்தது 4.30க்கு பெங்களுரில் 5.30 வரை போதிய வெளிச்சம் காணப்பட்டது. ஒரு நாள் போட்டிகளில் 100 ஓவர்கள் மொத்தமாக வீசப்படுகின்ற போது டெஸ்ட் இல் ஏன் வீசக்கூடாது. தேனீர் இடைவேளைக்காக எடுத்துக் கொள்ளும் 20 நிமிட நேரத்தில் 4 ஓவர்கள் பந்து வீசலாம்.

எதுலயும் லாபத்த தானே பாக்கனும்...............

1 COMMENTS:

பெயரில்லா சொன்னது…

Cricket is of the people, for the people & by the people....Nanban