ஆபத்தான ஆடுகளம்.

இன்று (27.12.2009) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தொலைக்காட்சி ரசிகனாக மாறி ஏமாந்த கதை! ஒரு ஊடகவியலாளன் ரசிகனாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் நல்ல ஊடகவியலாளனாக வர முடியும். இன்று ஒரு நாள் முழுமையாக மாறிப்பார்த்தேன்.

ஒரு சில வேலைகள் மட்டுமே இருந்ததால் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டியை ரசிக்கலாமென்று முதல் நாளே யோசித்திருந்தேன். வருடத்தின் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்படும்னு யார் நினைச்சா? நேந்து விட்ட ஆடு விஜய் படத்தை பார்க்க போற மாதிரி இப்போட்டி முடிவு தீர்மானிக்கப்பட் ஒன்று. ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இருந்தாலும் ''அது போன வாரம்'' ன்னு வடிவேலு ஸ்டைல்ல எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு தைரியமா பாக்கலாம்னு உட்கார்ந்தால் முதலாவது பந்திலே போல்ட் செய்யப்பட்டார் தரங்க. டில்சான் ஜயசூரிய இருந்த நம்பிக்கையில் உறுதியாக அமர்ந்திருந்தேன். மிட் நைட் மசாலா சிக்கலுக்கு நான்காவது போட்டியில் துப்புக் கொடுத்த இருவரும் இந்த போட்டியிலும் சொதப்பிருவாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற. அதாங்க நான்காவது போட்டிக்கு முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை இரவு விடுதியில் ஆடிப்பாடிவிட்டு வந்ததா சொன்னாங்களே. அந்த படங்கள் வலையுலகில் வட்டமடிப்பதாய் அறிந்தேன்(ஆர்வமுள்ளவங்க தேடிப்பாருங்க).

கூப்பிட்டு அடிக்கிறீங்களே நியாயமா?

தில்சான் சனத் இருவரும் சந்திந்த பந்துகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. இருவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் காயமில்லாமல் பந்து உடம்பில் பட்டு வேதனை கண்டது வருத்தம் தந்தது.

ஐயோ அம்மா இனி இந்த பக்கமே வரமாட்டேன்டா சாமி!

இலங்கை அணியின் விக்கட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கியது. 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது தான் ஆடுகளம் தன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுப்பதில் சிரமப்பட்டதை தொடக்கத்தில் அவாதானிக்கக் கூடியதாய் இருந்தது. ஆடுகளத்தில் பதிகிற பந்து வழக்கமாக மேலெழும்பும் அளவை விட உயரமாக வந்ததால் 23ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. க்ளைமெக்ஸில் போட்டி நடுவர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எல்லாருமா கூடி என்னோட ஞாயிற்று கிழமை உல்லாசத்துக்கு கும்மியடிச்சிட்டாங்கப்பு. கொல்டா ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு ஆபாத்தானதாக கருதி போட்டி கைவிடப்பட்டது.


இந்தியா தோத்துப்போனா வீரர்கள் வீட்டுக்குத்தான் கல்லடிப்போம் இப்பதான் மைதானத்துக்கு அடிக்கிறோம். ஐ ஜாலி!

கொல்டா மைதானம் மோசமான ஆடுகளம் என்று பல முறை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபரில் நடந்த செம்பியன்ஸ் லீக் போட்டியின் போதும் கவுதம் கம்பீர் இம்மைதானத்தை விமர்சித்திருந்தார்.

இந்த லட்சனத்துல 2011 உலகக்கிண்ண போட்டி இங்கும் நடக்குமாம். அடுத்த சர்வதேச போட்டித் தொடர்களுக்கு முன் இந்திய கிரிக்கட் சபை மைதான ஓழுங்கமைப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தினால் நல்லது இல்லைன்னா திடீர்ன்னு கரன்ட் கட்டாகிடும்.

+++++

தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்றிக்கொண்டிருந்தேன். திடீர்னு பாத்தா ஏதோ வாக்கு வாதம் நடந்துகிட்டிருக்கு. ரிமோட் கொன்ரோலை உட்கார வைச்சிட்டு வேடிக்கை பார்த்தேன். (எங்க வீட்ல கேபிள் TV கிடையாது)


நட்சத்திர பாடகர் தெரிவாம். ஒருத்தர் பாடுறாரு அப்புறம் நிகழ்ச்சி நடத்துறவரு நடுவர் கிட்ட கேள்வி கேட்குறாரு அதுவும் எடக்கு முடக்கான கேள்வி. குறித்த ரெண்டு பேருல யாரு தெரிவாகுவாங்க? sms முடிவு வேற மாதிரி சொல்லுதே. அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு?
நியாயமான கேள்வி. பாட்டு பாடுற நடுவர் ஐயா உங்க பதிலுக்கு பிறகு தானே புரிஞ்சது உங்க ட்ராமா.(இந்த படத்த ஏற்கனவே நாங்க பாத்துட்டோம்ல) ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)
வருந்தத்தக்க அணுகு முறை.
இப்படித்தான் பர்வையாளர்களை அதிகரிக்கனுமா? போட்டியாளர்களும் நடிகர்களா இருக்க மாட்டாங்களான்னு என்ன உறுதி?
முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒரு போட்டியா இருக்க வாய்ப்பில்லையா? sms அனுப்புகிறவர்கள் முட்டாள்களா?
நடுவர்களாக வந்தவர்கள் இலங்கை பாடகர்களா அல்லது நடிகர்களா? (நடிக்க வந்த பாடகர்களா, பாட வந்த நடிகர்களா? குழப்பமா இருந்தா விட்டுறுங்க)
இதுவும் ரொம்ப ஆபத்தான ஆடுகளம் இல்லையா?

ஏற்கனவே இந்த மாதிரியான நாடகத்தை தமிழகத்தின் அலைவரிசைகள் அரங்கேற்றி மூக்குடைந்த கதை உலகறிந்த விடயம். ஒரு அலைவரிசை சிம்ரனையும் இன்னுமொரு அலைவரிசை சிம்புவையும் வாடகைக்கு அமாத்தியது எங்களுக்கு தெரியாதா. தயவுசெய்து தொலைக்காட்சி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். சந்தையை பிடிக்க இதைவிட பல நல்ல வழிகள் இருக்கின்றன.

இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம்.

கியூபாவின் கண்ணீர் கனவுகள்.

::யாவும் கற்பனை::

கொஞ்(ச)சும் மழை, காது நோகாம ஒரு பாட்டு, நெடுந்தூரம் யாருமில்லை கால் நீட்டி வண்டி ஓட்டுற சுகம் இதை விட வேற என்ன வேணும் மது?. ஆஹா பிராமதம்! சோடா புட்டிக்கு ரசிக்கவும் தெரியுதுன்னு சொன்னாள் மது. லூசுத்தனமா எதச் சொன்னாலும் ஆஹா போட நீ இருக்கும் போது செவேரோ சாதூயை மிஞ்சிடுவேன் பாரேன்னு பதில் சொன்னான் ராகுல்.


செவேரோ கியூபாவின் பிரபல கவிஞர்களில் ஒருவர். ராகுலுக்கு ஆறு வயது இருக்கும் போதே அவன் பெற்றோர் கியூபாவின் சென் நிக்கலோஸில் குடியேறிவிட்டார்கள். இவன் அடிப்படை கல்வியை பெற்றது இங்குதான். ஸ்பெய்னின் காலநித்துவத்தில் கசங்கிப்போன சுவடுகளில் இருந்து மீளாத கியூபாவைப்போல அவன் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் வருடங்கள் 19 கடந்தும் மாறவில்லை.

தாயகத்தை இன்னும் அவனுக்கு ஞாபகப்படுத்த இருக்கும் ஒரே ஒரு சொத்து மது. கம்பியில்லாமல் காற்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டே கதை சொல்லும் ஒரு வழக்கம் ராகுலுக்கு கார் வாங்கிய பிறகு.

''ரெண்டு மூனு நாளா உன்ன மாதிரியேதான்'' என்று வாய் திறந்தவன் மூடுவதற்குள் ''என்ன என் மாதிரியான்னு?'' கேட்டு முடித்தாள் மது. ''ம்ஹ்ஹ்; அழுது கிட்டே இருக்கு வானம்'' எப்பவும் அவளை கிண்டலடிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ப்ரியம்.

காலையில் எழுந்து கடன் தீர்த்து அலுவலகம் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் தவிர ராகுலுக்கு இருக்கும் ஒரே ஒரு தனிமை கில்லர் மது. அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் 40 நிமிடங்கள். இந்த இடை வெளியில் அவன் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் ஏராளம்.

''எனக்கென்ன கவலை மது ஓபீஸ் - வீடு - ஓபீஸ் வீடுபோனால் என்னை காதலிக்க டீட் டீட் டீட் டீட '' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தால் ஸ்பெனிஸ் மொழியில் ஒரு பெண் குரல்.

''நீங்கள் அழைத்த வாடிக்கையாளருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை''
தொடரும்....

யார் நாயகன்? கமல், மணி, ராஜா

ரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.
நாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்
.
நாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.
நாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.
டைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...
நான் ரசித்த சில காட்சிகள்
# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது
# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.
# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.
# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..
# நிறுத்தவே மாட்டீங்களா? நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........
நீங்க ரசித்ததையும் சொல்லுங்கோ.........

ஐயோ நானில்லை மழைத்துளி !



ஞாயிறு மாலை ஜன்னலோரத்தில்

(கவிதை எழுத) தெரியாமல் ஒரு கவிதை எழுதுகிறேன்

மழையுடன் மப்பும் மந்தாரமுமாய் வானம்

என் வீட்டுச்சாலையோரம் எங்கும் ஒரே அமைதி

ரசிப்பதற்கு ஒன்றுமில்லை பஞ்சவர்ண குடைகளும் கூட

திரும்பும் போது ஒரு மழைத்துளி என் முகத்தில்

தேடினேன் எங்கிருந்து வந்ததென்று

ஆ! அங்கே ஒரு மின் கம்பம்

கம்பி நெடுவே தப்பிப் பிழைத்த சில துளிகளும்

தற்கொலை செய்து கொள்கின்றன

என்னை தேடி வந்த மழைத்துளி என்ன சொல்ல வந்தது?

நீ சொல்லாத ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நியாயமில்லாமல் காரணமில்லாமல் கனவுகள் ஆயிரம்

யாருக்கு தெரியும் யார் கண்பட்டதோ

இந்த நகரத்தில் இனி எனக்காக யார்

காதல் செய்ய யாருமில்லை

வலிகள் ன ந

க ந வாக்குறுதி

மௌனம்


தடுமாறிப்போனேன் மழைத்துளியா இது !


குறிப்பு :- மழைத்துளி எழுதியதால் காய்ந்து போயிருக்கும் தேட வேண்டாம்.


இது ஜிஹாதா? கோழைத்தனமா?


Fort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.

அமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.

பாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.

ஜிஹாத் என்றால் என்ன? நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா?

சமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா?

இப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.

சம்பவத்திற்கு பிறகு ...

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

உண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...

ஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.
அமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்


நான் அடிச்சா தாங்க மாட்ட!


வருகிற சோதனைகளும் வேதனைகளும் இன்னுமொருவருக்கு சொல்லி அழுவதற்கல்ல. அதன் மூலம் வாழ்க்கையை படித்து அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

எனக்குத்தான் யாருமில்ல எனக்குத்தான் எல்லா கஷ்டமும் இப்படி நினைப்பவர்கள் நம்மில் பலர். இவர்கள் என்னை பொறுத்தவரை வாழத்தெரியாத கோழைகள்.

எதுக்கெடுத்தாலும் அடுத்தவன் முதுகு சொறியனும்னு எவ்வளவு காலத்துக்கு பாத்துக்கிட்டு இருக்க போறோமோ? சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க. இத விட்டுட்டு நான் அடிச்சா தாங்க மாட்டென்னு மொக்கை சிந்தனை சொல்ற பாடல்களை கேட்டு கெட்டுப்போயிடாத அப்பு அப்பிடீன்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு. சொல்லிட்டேனுங்கண்ணா..

மொக்கைன்னு சொல்லும் போது ஞாபகத்தில் வந்ததை தட்டிவிடுகிறேன். கொஞச்காலம் நம்ம ஊர் பதிவர்கள் சிலருக்கு ப்ளக் புளு தாக்கிடுச்சி பாருங்க எதுக்கெடுத்தாலும் அடுத்த தேசத்து தாக்கம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கருத்து. உங்க குமுறல்களை சொல்லி நல்லா போய்க்கிட்டிருக்கிற தமிழ் பதிவுலகத்திலயும் கும்மியடிச்சிடாதீங்க. தமிழ் தானாக வளரும் அதை விட்டுட்டு உங்க ஊர் தமிழ் உங்க தேசத்து தமிழ் எதுக்கு? நம்ம பதிவுகளில 75 சதவீதத்துக்கு மேல அடுத்த தேசத்து சொத்தைதான் விமர்சிக்கிறோம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

''பதிய வந்ததை விட்டுட்டு ஏதேதோ தட்டிக்கிட்டிருக்க.. ஓ இப்ப இது கூட பேஷன் தானே கோவிந்தன் வீட்டு நாய் வயசுக்கு வந்தாலும் பதிவு போடுறாங்கப்பு'' - ராமசாமி அண்ணே

Nick Vujicic - 4th Dec 1982 (Melbourne, Australia)


மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவறாக பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.


''வாழ்க்கைல அதிஷ்டம்னு ஒன்னும்மில்லை. சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான் மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம்ம வாழ்க்கையில எதையும் தப்பா கொடுக்க மாட்டாரு ஏதாவது காரணத்தோடுதான் எதையும் செய்வார். எனக்கு இப்போ 23 வயசாகுது வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்துக்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டுபன்னனும்.'' என்கிறார் நிக்.


நல்ல பேச்சாற்றாலால் இளைஞர்களை கவர்ந்த நிக்கினின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்த புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்னுமில்லைன்னு சொல்லும் நிக் தான் கைகளற்றவன் கால்களற்றவன் என்று வருந்தப்போவதில்லை என்கிறார்.

அடுத்த தடவை சோதனை மேல் சோதனை என்று நாம் வருந்த முடியாது.