ஒஸ்கார் வென்ற எரிச்சல்கள்.

AM 11:30 Hisham Mohamed - هشام 2 Comments

ஒஸ்கார் சென்ற தமிழனுக்கு வாழ்த்துக்கள் கோடி.நீ ஒஸ்கார் சென்றதை விட அதை வாங்கிய பிறகு தமிழில் சொன்ன வார்த்தைகளே உன் தாய்மொழிக்கு நீ கொடுத்த கௌரவம்.


இசைப்புயல் A.R. ரஹ்மான் ஸ்லம் டோக் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் கடந்த ஞாயிறு(22) விருதுகளை பெற்றுக்கொண்டார்.


11 வயதில் தந்தையை இழந்து தன் குடும்பத்தை கரை சேர்க்கும் உன்னத கனவுடன் தன் திறமையை மாத்திரம் நம்பி களத்தில் இறங்கிய ரஹ்மான் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றது மாத்திரமல்லாது. தன் நாட்டிற்கும் தன் தாயக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.


ஒரு தமிழன் வாங்கிய முதலாவது ஒஸ்கார் விருது. ஒஸ்கார் விருது சர்வதேச அளவில் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் ஓர் உயரிய அந்தஸ்து. இது அமெரிக்காவில் கொடுக்கப்படுவதால் அமெரிக்கர்களுக்கான விருதாகுமா?


விருது வென்ற தமிழனுக்கு வாழ்த்துச்சொல்ல பல இந்திய தளங்கள் திட்டமிட்டு செயற்பட்டது வருத்தத்திற்குரியது. ரஹ்மான் ஒஸ்கார் விருது பெற தகுதியுடையவரா? இல்லையா? இதுபோன்ற பல கருத்துக்கணிப்புக்கள்.
என் பார்வையில் இந்த விருதை பெற ரஹ்மான் முழு அளவில் தகுதியானவர்.





ஸ்லம் டோக் இது அவருடைய ஒரு சில ஆங்கில படைப்புகளில் ஒன்று. ஆனால் தமிழில் வெளியான ஆயிரக்கணக்கான படைப்புகளில் அவர் தன் திறமையை நிரூபித்ததற்கு கொடுத்திருக்க வேண்டும் நூற்றுக்கணக்காக ஒஸ்கார் விருதுகள்.


ரஹ்மான் என்கிற மனிதரிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம். விடா முயற்சி, தொழில் மீது கொண்டுள்ள பற்று, உயர்வுகளின்போது காட்டும் தன்னடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


ஒஸ்கார் வென்ற தமிழனை இனி உலகறியும். படைப்புகள் விற்பனையானதில் இசைப்புயல் ரஹ்மான் உலக இசையமைப்பாளர் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். ரஹ்மானின் வயதையும் வேகத்தையும் பார்த்தால் நம்பர் 1 இடத்ததை பிடிக்க ரொம்ப காலம் தேவைப்படாது. இதுவரையில் இவரது அரை பில்லியன் படைப்புகள் விற்பனையாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


ஸ்லம் டோக் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது உண்மை ஆனால் அதை விளக்கப்படுத்தும் அளவுக்கு மும்பை சமூக கட்டமைப்பை நான் அறிந்ததில்லை. படத்தின்படி அங்கே நடக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒஸ்கார் விருதுக்கு பிறகு முன்பு போர்கொடி உயர்த்திய பலரும் இது இந்திய படைப்பு என்று மௌனமானதுமுண்டு. சிலர் இன்னும் இது இந்தியர்களை அவமானப்படுத்தும் படைப்பு என்று பலவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறர்கள்.


காதலன் காதலியை சந்திக்கிறான். காதலன் காதலி பிரிகிறார்கள். காதலன் சோகத்தில் பாடுகிறான். காதலி காதலன் மீண்டும் இணைகிறார்கள். இதுதான் இந்திய சினிமா என்று வர்ணித்த பிரித்தானிய சஞ்சிகைகள் ஸ்லம்டோக விருது வென்ற பிறகு தங்கள் நாட்டு படைப்பென்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.


பாவம் அமெரிக்கர்கள்.பல கோணத்திலிருந்து இவர்களுக்கு பலத்த அடி ஒலிம்பிக் போட்டிகளில் வேகமான மனிதர் அந்தஸ்து தொடங்கி பொருளாதார சரிவு, நிதி நிறுவனங்கள், வாகன உற்பத்தி, வேலையிழப்பு இறுதியாக ஒஸ்காரிலும் சரிவு. இம்முறை ஒரே ஒரு அமெரிக்கர்தான் ஒஸ்கார் விருது வென்றார். இது அமெரிக்க சஞ்சிகைகள் சொல்லும் கதை.

இசை உலகம் சஞ்சிகையில் என் வலைப்பூ

AM 10:17 Hisham Mohamed - هشام 8 Comments

பதிவு போட வேண்டும் என்று ஆர்வத்தோடு ஆரம்பிக்கிறேன். ஆனால் நாலே வார்த்தைகளில் எழுத்துக்கள் முட்டிமோத இதை எழுத முடியுமா முடியாதா என்கிற போராட்டத்தின் முடிவில் பாதியில் பதிவு செய்த பதிவுகள் ஏராளம். இந்த முறை பதிவிடாமல் திரும்பப்போவதில்லை.

என் வலைப்பூ தொடர்பான தகவல்களை பிரசுரித்த இசை உலகம் சஞ்சிகைக்கும் தொடுப்பு கொடுத்த சகா லோஷனுக்கும் நன்றி சொல்லி உறவை தூரமாக்க நான் விரும்பவில்லை.

மன்னித்துவிடுங்கள் கடந்த சில நாட்கள் பம்பரமாய் சுழன்றதில் என் சக்கரங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டேன் உங்களிடம் அனுமதி வாங்காமலேயே.

வெற்றி வானொலியின் முதலாவது பிறந்த(காதலர்) தினம், தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி, வீட்டு வேலைன்னு பெப்ரவரி மாதத்தின் 20 நாட்கள் போனதே தெரியல.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி நண்பர்களே.

? இதுதானா வாழ்க்கை

PM 5:48 Hisham Mohamed - هشام 3 Comments

நான் தேநீரில் மிதந்த மாலைப்பொழுதில் அம்மா ஒரு சொன்ன கதை. (சாரி போஸ் மூன்று நாள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான வேலை அதனால ஏற்கனவே போட்ட பதிவை ரீமேக் பன்றேன். பாசக்கதையை பாசக்கார நண்பர்கள் படிச்சிட்டு போங்கோ.)




அப்பா என்கிற அந்தஸ்து வந்த பிறகு தன் மகன் தான் அனுபவித்த துயரங்களில் ஒரு துளியேனும் அனுபவிக்ககூடாது என்று எண்ணுகிறவர். தோளுக்கு மேல வளர்ந்தாலும் அவன் வீடு சேரும் வரை அந்த அப்பாவிற்கு இருக்கிற ஏக்கத்தையும் தவிப்பையும் அப்பா என்று நீங்கள் அழைக்கப்படும் போது தான் உணரமுடியும்.

ஒரு வயது முதிர்ந்த அப்பா தன் மகன் லெப்டொப்பில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்ததை பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாராம்.


தீடீரென்று ஜன்னலோரத்தில் ஏதோ ஒன்று கறுப்பு நிறத்தில் அமர்ந்தது போல கண் பார்வை இழந்த அந்த அப்பா உணர்ந்தார். உடனே மகனிடம் '' ஏன்பா அது என்ன ஜன்னலோரத்துல'' என்று கோட்டார். மகன் ''காகம்'' என்று முதல் முறை பதில் சொன்னானாம். காது கேட்கும் திறனை இழந்ததால் மீண்டும் அந்த தந்தை '' ராஜா அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல:'' என்று கேட்க கொஞ்சம் சினம் கொண்டவனாய் ''காகம் '' என்று அழுத்தி பதில் சொன்னான். மீண்டும் சொற்ப நேரத்தில் அந்த தந்தை '' மகன் அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல'' என்று கேள்வி எழுப்ப பெரும் கோபத்துடன் அந்த மகன் '' ஜயோ அப்பா அது காகம் காகம்'' என்று கத்தத் தொடங்கினான். இருந்தும் அந்த தந்தைக்கு ஜன்னலோரத்துல கறுப்பு நிறத்துல இருக்கிறது என்னவென்று புரியவில்லை.

நடந்தவற்றை சமையலறையில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்த தாய் ஒரு பழைய டயரியுடன் அந்த மகனை நோக்கி வந்தாள். அந்த அம்மா மகனை பார்த்து '' இதுல பெப்ரவரி 10ம் திகதியை திருப்பிப்பார்'' என்று சொன்னதும் காற்றில் பறந்த காகிதங்கள் 10ம் திகதியில் போய் நிற்க அதில் அந்த தாய் எழுதியிருந்தது. ''மூத்தவன் கதைக்க ஆரம்பித்து ஒரு சில வாரங்கள். அவனுக்கு ; அம்மா, ப்ப்பா, என்னது என்று தெரிந்தது ஒரு சில வார்த்தைகள்தான். அன்று என் கணவர் ஜன்னலோரத்தில் என் செல்லக்குட்டியை தூக்கிக்கிட்டு நின்று கொண்டிருந்தபோது ஒரு காகம் ஜன்னலோரத்தில் அமர்ந்தது அப்போ மகன் அவரிடம் 28 தடவைகள் அது என்ன? அது என்ன? அது என்ன, என்று கேள்வி கேட்டான். ஒரு தடவைக்கூட சலிப்பு தட்டாதவறாய் சிரித்துக்கொண்டே காகம் என்று பதில் சொன்னார்''.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல சின்ன வயசுல நாங்க நடந்து கொள்கிற விதம் வயது போக போக எங்களை தொற்றிக்கொள்ளும். வயதானவர்கள் குழந்தை போலன்னு சொல்லுவாங்க. ஒரு தொழிலுக்கான நேர்முகப்பரீட்சைக்கு போனால் எத்தனை வருட அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. அதுமட்டுமல்ல எந்த ஒரு துறைக்கும் பலரும் கேட்கும் முதல் விடயமும் அதுதான் அனுபவம். ஒரு கட்டத்துக்கு மேல அனுபவமும் வாழ்க்கைக்கு உதவாமல் போகிற கொடுமை அது முதுமை.

என்னதான் பத்து பிள்ளைகளை பெத்து வளர்த்திருந்தாலும் பல பெண் பிள்ளைகளை கரை சேர்த்து ஒரு குடும்பத்தையே முதுகில் சுமந்திருந்தாலும். தாத்தா என்று பேரப்பிள்ளைகள் உங்களை அழைக்கும் போது நீங்கள் குழந்தை மாதிரி இல்லையா?

இதயத்தை உருக்கும் கதை

PM 11:40 Hisham Mohamed - هشام 14 Comments


கடின உழைப்பாளிகள் நேரம் ஒதிக்கி கொஞ்சம் வாசிச்சிட்டு போங்க.



ஒரு தந்தை தன் வேலையை முடிச்சிட்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்குப்போகிறார்.

தந்தையின் வருகைக்காக கதவோரத்தில் சாய்ந்தபடி காத்திருக்கிறான் 5 வயது சிறுவன்.

அப்பாவை கண்ட சந்தோசத்தில் அவரை கட்டித்தழுவிக்கொண்டான்.

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்?

அப்பா : ம்ம்ஹ்..... என்ன அது?

மகன் : அப்பா ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவ்வளவு காசு சம்பாதிப்பீங்க?

அப்பா : அது உனக்கு தேவையில்லாத கேள்வி. அது எதுக்கு உனக்கு? என்று கோபித்துக்கொண்டார்.

மகன் : எனக்கு தெரிஞ்சிக்கனும்பா சொல்லுங்க ப்ளீஸ்? ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவ்வளவு காசு சம்பாதிப்பீங்க?

அப்பா : ஒரு மணித்தியாலத்திற்கு 100 ரூபாய் சம்பாதிக்கிறன்.

மகன் : 'ஓ' என்று தலையை குனிந்தவன் நிமிர்ந்து நின்று 'அப்பா எனக்கொரு 50 ரூபா காசு வேணும்' என்றான்.

'இதற்காகவா இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டான்' என்ற கோபத்தில். ஒரு விளையாட்டுப்பொருளை வாங்கிக்கேட்டிருந்தாலும் பரவாயில்ல என்று கோபப்பட்டு முனுமுனுத்துகொண்டவர். 'உள்ள போ என்று மகனை திட்டிவிட்டார்'

வாடிப்போனவன் தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டான்.

சிறிது நேரத்தில் வேலை விட்டு வந்த சோர்வு நீங்கி அமர்ந்திருந்த அந்த தந்தை சிந்திக்க தொடங்கினார்.

''அவன் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் 50 ரூபா காசு கேட்டிருப்பான். அவன் என்கிட்ட அண்மையில காசு கேட்டதே இல்ல'' என்று தனக்குள் நொந்துக் கொண்டவர் அவன் அறைக்குள் நுழைந்தார்.

அப்பா : தூங்கிறீயா?

மகன் : இல்லப்பா நான் எழும்பித்தான் இருக்கேன்.

அப்பா : டேய் அப்பாவுக்கு ரொம்ப டயர்ட்டா இருந்தது அதுதான் கோபமா திட்டிட்டேன். சரி இந்தா நீ கேட்ட 50 ரூபா.

'ஓ தெங்கியு அப்பா' என்று அளவில்லா ஆனந்தமடைந்தவன் தன் தலையணையின் அடியிலிந்து இன்னும் கொஞ்சம் காசையும் எடுத்து கணக்கிட தொடங்கினான்.

அவன் கிட்ட ஏற்கனவே காசு இருந்ததை கண்ட அப்பா ''இவ்வளவு காசு உனக்கு எதுக்கு'' என்றார்.

மகன் : முன்ன கொஞசம் போதாமல் இருந்தது இப்பதான் சரியா இருக்கு. அப்பா இப்ப என்கிட்ட 100 ரூபா காசு இருக்கு உங்க டைம்ல ஒரு மணித்தியாலத்தை எனக்கு தருவீங்களா?

அப்பா நாளைக்கு நேரத்தோடு வீட்ட வாங்க உங்க கூட இரவு சாப்பிட்டதே ஞாபகமில்ல. உங்களோட ஒன்னா சாப்பிட ஆசையா இருக்கு.

ஒரு 100 ரூபா காசுக்காக உண்மையான அன்பை இழக்கிறதுல அர்த்தம் இருக்கா? எல்லாருமே கடுமையாக உழைக்கிறோம். நேரமும் காலமும் ஓடிகிட்டே இருக்கு சிலர் கடல் கடந்து உழைப்பவர்களாகவும் இருப்பீர்கள். எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்களோடு செலவழிக்கவும் எங்களிடம் நேரமில்லையா?

நாம நாளைக்கே மண்டைய போட்டா நம்ம கம்பனி இலகுவாக நம்ம இடத்துக்கு இன்னுமொருவரை நியமிக்கும். ஆனால் உங்கள் குடும்பமும் நண்பர்களும் அவர்களின் ஆயுள் முழுதும் நம் பிரிவை உணர்ந்து வாடமாட்டார்களா?

பணமா பாசமா என்கிற போராட்டத்திற்கு மத்தியில் நம் தெருவில் இது போல ஆயிரம் கதைகள்.