நமது கடல்... ஒரு மாயையும், நங்கூரமிட்ட உண்மையும்! 🚢🌊

 "நம்ம நாட்டைச் சுத்தி கடல் இருக்கு, அதனால மீன்களுக்குப் பஞ்சமே இல்லை... நினைச்ச நேரமெல்லாம் வலை விரிச்சு மீன்களை அள்ளிக்கிட்டே இருக்கலாம்" - இப்படித்தான் நம்மில் பலரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிதர்சனம் நாம் நினைப்பது போல அத்தனை அழகானதல்ல.

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றிருந்தபோது, 32 நாட்கள் நீடித்த ஒரு நீண்ட ஆய்வை முடித்துவிட்டு நங்கூரமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கப்பலைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயர் R/V Dr. Fridtjof Nansen. ஐக்கிய நாடுகளின் கொடி பறக்க, கம்பீரமாக நின்றிருந்த அந்த இராட்சத கப்பல் சொன்ன கதைகள் பல.


விந்தையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர் பதற்றம் மட்டும் இல்லாதிருந்தால், இந்தக் கப்பல் இலங்கை மண்ணிற்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. உண்மையில் இது ஓமன் கடலுக்குச் செல்ல வேண்டியது. அங்கே நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், அதன் திசை மாறி நம் நாட்டிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது.
உலகளவில் சுமார் 90 சதவீத கடல் மீன் வளங்கள் இப்போது 'அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்பட்டு' (Over-fished) அல்லது முற்றாக அழிந்து (Depleted) போய்க்கொண்டிருக்கின்றன. நம் கடலடியில் என்ன நடக்கிறது, இன்னும் எவ்வளவு மீன்கள் மிச்சமிருக்கின்றன என்ற எந்தத் தரவுகளும் (Data) நம் அரசாங்கத்திடமும் இல்லை, மக்களாகிய நமக்கும் தெரியாது.
இந்தக் கப்பல் கடந்த 32 நாட்களாக எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சுற்றித் திரிந்து, மீன் வளம் எங்கே செறிவாக இருக்கிறது, கடல் நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது, நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) கடலை எந்தளவுக்குக் பாதித்திருக்கிறது என அத்தனையையும் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறது Dr. Fridtjof Nansen கப்பல்.
நோர்வே நாடும், FAO அமைப்பும் இணைந்து சுமார் 1 மில்லியன் டொலர்களை இதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்றனர், அதிலும் குறிப்பாகப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக அதிகம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
துறைமுகத்தில் நின்று அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது... இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தரவுகள்தான், நாளை நம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.

ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய தருணம்

 சில தருணங்கள் காலத்தின் பக்கங்களில் என்றென்றும் உறைந்துவிடுகின்றன; அந்தப் பிரமாண்டமான மேடையும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவிய "


ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி வியாழன் மாலையும் அப்படியானதொரு பொக்கிஷமே.

நேர முகாமைத்துவமும், கலையழகும், கட்டுக்கோப்பும் ஒருங்கே கைகோர்க்க, குறித்த நேரத்தில் அவ்வளவு நேர்த்தியாக அரங்கேறியது அகில இலங்கை கம்பன் கழகத்தின் விழா 2026. அங்கே கழகத்து உறுப்பினர்கள் மட்டுமன்றி, கடல்கடந்து அவுஸ்திரேலியா, இலண்டன் எனப் பல தேசங்களிலிருந்தும் வருகை தந்து, என்னை அன்பால் அரவணைத்த உள்ளங்கள் தந்த ஊக்கம் என்னை நிஜமாகவே மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல், மதிப்பிற்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அவர்கள் திருவாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் ஆசீர்வாதங்களாய் அமைய, அந்த வாழ்த்து மழையில் திளைத்து நின்றேன். என் குடும்பத்தினரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரின் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட அந்த நொடிகள், என் வாழ்வில் நான் ஈட்டிய அரும்பெரும் பேறு.
தங்களின் அன்றாடப் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நான் விருதுபெறும் தருணத்தைக் காண ஓடோடி வந்து வாழ்த்திய அந்தப் பேருள்ளங்களுக்கு என் வார்த்தைகளால் எங்ஙனம் நன்றி நவில்வேன்? இத்தனை பெரியதொரு சபையில், திசையெங்கும் வீற்றிருந்த மாபெரும் சான்றோர்களின், ஆளுமைகளின் அன்பை வென்றெடுத்தமை நான் செய்த பெரும் பாக்கியமே அன்றி வேறில்லை.
இந்தக் காணொளியினூடாக அந்த உன்னதத் தருணத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரின் வாழ்விலும் சகல நலன்களையும் வழங்கி அருள்புரிவானாக!
நன்றி!

அசுர வளர்ச்சிக்கு! ஒரு ஜப்பானிய ரகசியம்!

 "தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு" என்று சொல்வார்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் இது போன்ற தத்துவத்தை பயன்படுத்தி ஜப்பானியர்கள் தொழில்துறையில் முன்னேற்றம் கண்டதோடு வர்த்தக உலகத்திற்கே கற்றுக்கொடுத்த மந்திரம்தான் Genchi Genbutsu.

Genchi Genbutsu என்பது ஜப்பானிய தத்துவமாகும், இது முடிவெடுப்பதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நேரடி கவனிப்பு மற்றும் அனுபவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதன் அர்த்தம் "நீங்களே சென்று பாருங்கள்" என்பதாகும். Toyota நிறுவனத்தின் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்த டய்சி ஓனோ தனது நிறுவனத்தின் உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து முன்னேற்றம் காண கண்டறிந்த தத்துவமே இது.

இது எந்தப் பிரச்சனையையும் விரைவாகவும் திறமையாகவும் புரிந்துகொள்வதற்கும் தீர்க்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டது. இன்னும் எளிமையாக சென்னால், எந்த இடத்தில் பிரச்சினை உள்ளதோ அந்த இடத்திற்கு நேரடியாக சென்று சூழ்நிலையை நன்கு அவதானித்து தீர்வு காணும் முறை.

இந்த அணுகுமுறை பல தசாப்தங்களாக வெற்றிகரமான வணிகத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் திறனைத் மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

Genchi Genbutsu செயல்பாட்டிற்கு ஒரு பிரபலமான உதாரணம் MCDonalds அதிபர் Ray Kroc. ஓய்வு பெற்ற பிறகு, Kroc நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார், அவர் "நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் கண்கள்" என்று பெருமையாக அழைக்கப்பட்டார். அவர் தனது நாட்களை மெக்டொனால்டு உணவகங்களில் வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் கவனித்து, தனது அவதானிப்புகளை மீண்டும் குழுவிற்கு அறிக்கை செய்தார், மேலும் நிறுவனத்தின் வெற்றிக்கு உதவிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினார். பின்னாட்களில் உணவகம் உலகம் முழுதும் வியாபிக்க து பெரும்பலமாக அமைந்தது.

மற்றொரு உதாரணம் டெர்ரி லீஹி, UK சூப்பர்மார்க்கெட் தெடரான டெஸ்கோவின் முன்னாள் CEO. லீஹி கடமையில் இணைந்து தனது முதல் ஆறு மாதங்களை CEO ஆக காரியாலயத்திற்கு செல்லாமல் விற்பனை தளங்களுக்கு சென்று, என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, ஊழியர்களுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த அணுகுமுறை முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண அவருக்கு உதவியது மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.

Genchi Genbutsu என்பது சிக்கலைத் தீர்ப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள அணுகுமுறையாகும். சிக்கலை நேரில் கவனித்து ஆராய்வதன் மூலம், நீங்கள் நிலைமையைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவீர்கள், மேலும் சாத்தியமான தீர்வுகளை எளிதாகக் கண்டறியலாம். இன்றைய வேகமான வணிக உலகில் இந்த அணுகுமுறை மிகவும் மதிப்புமிக்கது.

உங்கள் சொந்த வாழ்க்கையிலும் வேலையிலும் Genchi Genbutsuவைப் பயன்படுத்துவதற்கு, பிரச்சினைகளை நேரில் கவனித்து பின் ஆராய நேரத்தை ஒதுக்கத்தொடங்குங்கள். கேள்விகளைக் கேளுங்கள், கருத்துக்களைக் கேளுங்கள் மற்றும் சிறிய விவரங்களுக்கு கவனம் செலுத்துங்கள். இந்த அணுகுமுறை சிறிது நேரத்தையும் முயற்சியையும் எடுக்கலாம், ஆனால் மேம்படுத்தப்பட்ட சிக்கலைத் தீர்ப்பது மற்றும் முடிவெடுப்பதில் நீங்கள் அடையப்போகும் பலன் மிகவும் மதிப்பு வாய்ந்தது.

தொழில் மற்றும் சொந்த வாழ்வில் அணுகுமுறையை கையாண்டு பிரச்சினைகளை சிறப்பாக தீர்ப்பதற்கான சில எளிய பயிற்சிகளை எனது யுடியுப் பதிவில் பாருங்கள். 

தொடுப்பு: https://youtu.be/-w3DioCRNmc


மனம் ஏன் எப்போதும் மோசமாக நினைக்கிறது?

மோசமான சூழ்நிலையைப் பற்றி தொடர்ந்து கவலைப்படுவதில் நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் தனித்துவிடவில்லை. பேரழிவு, அல்லது மோசமான விளைவுகளை தொடர்ந்து கற்பனை செய்யும் பழக்கம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும் ஒரு பொதுவான சிந்தனை முறையாகும்.


இந்த வீடியோவில், பேரழிவுக்கான காரணங்கள் குறித்தும் எந்த பயனுமற்ற இந்த சிந்தனை பாணியை நிறுத்த உதவும் நடைமுறை உத்திகளையும் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் எண்ணங்களை மறுவடிவமைத்தல், எதிர்மறை நம்பிக்கைகளை சவாலுக்குட்படுத்தல் மற்றும் தற்போதைய தருணத்தில் முழுக்கவனம் செலுத்த கற்றுக்கொள்வது போன்ற நுட்பங்களை பார்ப்போம். 


பயங்கரமான எண்ணங்களை தோன்றுவதை நிறுத்தி இன்னும் நிறைவான வாழ்க்கையை வாழத் தொடங்குவது எப்படி என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் இந்த வீடியோ உதவும் என நம்புகிறேன். நீங்கள் மனஅழுத்தம், பதட்டம் போன்றவற்றில் ஈடுபட்டாலும் அல்லது உங்கள் மன நலனை மேம்படுத்த விரும்பினாலும், இந்த வீடியோ உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த தேவையான கருவிகளை வழங்கும். எனவே, இனி காத்திருக்க வேண்டாம், இன்றே உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயணத்தைத் தொடங்குங்கள்.




மக்கள் மனங்களை கவரும் அற்புதமான ரகசியம் ஒன்று!


Loneliness


"எல்லாம் ஒரு நாள் மாறும் உங்க பிரச்சினைகள் எல்லாம் தீரும்" என்று ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லி நம்பிக்கை கொடுப்பதில் தொடங்கி ஒரு சின்ன புன்னகை வரை சின்ன சின்ன விடயங்கள் என்று ஒருபோதும் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது நண்பர்களே.

மாயா ஏஞ்சலோ ஒரு அற்புதமான சிந்தனை சொல்றாங்க, 

"இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மக்கள் நீங்கள் சொல்வதை மறந்துவிடுவார்கள் நீங்கள் செய்ததையும் மறந்து விடுவார்கள் ஆனால் நீங்கள் அவர்களை எப்படி உணரச் செய்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்". 

உங்களுடைய ஒரு நண்பன் மிகுந்த கவலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு ஆறுதலான வார்த்தை சொல்லி மீண்டெழ நம்பிக்கை கொடுப்பது, ஒருவருடைய நல்ல பண்புகளை பாராட்டி அவரின் மதிப்பை உணரச்செய்வது அது போல ஒரு சின்ன காரியத்தின் மூலமாக ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது காலத்துக்கு உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கச்செய்யும். 

நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே மக்கள் மனங்களை கவரவும் உறவுகளிடத்தில் அன்பை வலுப்படுத்தவும் அன்புக்குரியவர்களை மேன்மையாக உணரச்செய்யுங்கள்.


என்ன இல்லை உன்னோடு? ஏக்கம் என்ன கண்ணோடு!

வாழ்க்கை எத்தனை அழகான விடயங்களை நமக்கு அளித்தாலும் எப்போதும் நமது மனது இல்லாத ஒன்றையே தேடிக்கொண்டிருக்கும்.

நம்மிடம் சொற்ப வளங்களே இருக்கலாம் நமது முயற்சிகள் சிறியதாக தெரியலாம் இருப்பினும் என்ன நம்மிடம் இருக்கிறதோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி நன்றியுணர்கொண்டால், எதை நாம் விரும்புகிறேமோ வாழ்க்கை அதை இன்னும் அதிகமாக நமக்கு தரும்.

த சீக்ரட் (Secret) புத்தகத்தில் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை (The Law of Attraction) அடையும் முக்கிய காரணியாக நன்றியுணர்வே பார்க்கப்படுகிறது. 

எதிர்மறை எணண்ணங்களிலிருந்து மீளவும் உறவுகளை பலப்படுத்தவும் நன்றியுணர்வின் அபாரமான சக்தியை பயன்படுத்துங்கள்.