ஆபத்தான ஆடுகளம்.

AM 12:44 Hisham Mohamed - هشام 13 Comments

இன்று (27.12.2009) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தொலைக்காட்சி ரசிகனாக மாறி ஏமாந்த கதை! ஒரு ஊடகவியலாளன் ரசிகனாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் நல்ல ஊடகவியலாளனாக வர முடியும். இன்று ஒரு நாள் முழுமையாக மாறிப்பார்த்தேன்.

ஒரு சில வேலைகள் மட்டுமே இருந்ததால் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டியை ரசிக்கலாமென்று முதல் நாளே யோசித்திருந்தேன். வருடத்தின் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்படும்னு யார் நினைச்சா? நேந்து விட்ட ஆடு விஜய் படத்தை பார்க்க போற மாதிரி இப்போட்டி முடிவு தீர்மானிக்கப்பட் ஒன்று. ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இருந்தாலும் ''அது போன வாரம்'' ன்னு வடிவேலு ஸ்டைல்ல எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு தைரியமா பாக்கலாம்னு உட்கார்ந்தால் முதலாவது பந்திலே போல்ட் செய்யப்பட்டார் தரங்க. டில்சான் ஜயசூரிய இருந்த நம்பிக்கையில் உறுதியாக அமர்ந்திருந்தேன். மிட் நைட் மசாலா சிக்கலுக்கு நான்காவது போட்டியில் துப்புக் கொடுத்த இருவரும் இந்த போட்டியிலும் சொதப்பிருவாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற. அதாங்க நான்காவது போட்டிக்கு முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை இரவு விடுதியில் ஆடிப்பாடிவிட்டு வந்ததா சொன்னாங்களே. அந்த படங்கள் வலையுலகில் வட்டமடிப்பதாய் அறிந்தேன்(ஆர்வமுள்ளவங்க தேடிப்பாருங்க).

கூப்பிட்டு அடிக்கிறீங்களே நியாயமா?

தில்சான் சனத் இருவரும் சந்திந்த பந்துகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. இருவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் காயமில்லாமல் பந்து உடம்பில் பட்டு வேதனை கண்டது வருத்தம் தந்தது.

ஐயோ அம்மா இனி இந்த பக்கமே வரமாட்டேன்டா சாமி!

இலங்கை அணியின் விக்கட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கியது. 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது தான் ஆடுகளம் தன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுப்பதில் சிரமப்பட்டதை தொடக்கத்தில் அவாதானிக்கக் கூடியதாய் இருந்தது. ஆடுகளத்தில் பதிகிற பந்து வழக்கமாக மேலெழும்பும் அளவை விட உயரமாக வந்ததால் 23ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. க்ளைமெக்ஸில் போட்டி நடுவர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எல்லாருமா கூடி என்னோட ஞாயிற்று கிழமை உல்லாசத்துக்கு கும்மியடிச்சிட்டாங்கப்பு. கொல்டா ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு ஆபாத்தானதாக கருதி போட்டி கைவிடப்பட்டது.


இந்தியா தோத்துப்போனா வீரர்கள் வீட்டுக்குத்தான் கல்லடிப்போம் இப்பதான் மைதானத்துக்கு அடிக்கிறோம். ஐ ஜாலி!

கொல்டா மைதானம் மோசமான ஆடுகளம் என்று பல முறை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபரில் நடந்த செம்பியன்ஸ் லீக் போட்டியின் போதும் கவுதம் கம்பீர் இம்மைதானத்தை விமர்சித்திருந்தார்.

இந்த லட்சனத்துல 2011 உலகக்கிண்ண போட்டி இங்கும் நடக்குமாம். அடுத்த சர்வதேச போட்டித் தொடர்களுக்கு முன் இந்திய கிரிக்கட் சபை மைதான ஓழுங்கமைப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தினால் நல்லது இல்லைன்னா திடீர்ன்னு கரன்ட் கட்டாகிடும்.

+++++

தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்றிக்கொண்டிருந்தேன். திடீர்னு பாத்தா ஏதோ வாக்கு வாதம் நடந்துகிட்டிருக்கு. ரிமோட் கொன்ரோலை உட்கார வைச்சிட்டு வேடிக்கை பார்த்தேன். (எங்க வீட்ல கேபிள் TV கிடையாது)


நட்சத்திர பாடகர் தெரிவாம். ஒருத்தர் பாடுறாரு அப்புறம் நிகழ்ச்சி நடத்துறவரு நடுவர் கிட்ட கேள்வி கேட்குறாரு அதுவும் எடக்கு முடக்கான கேள்வி. குறித்த ரெண்டு பேருல யாரு தெரிவாகுவாங்க? sms முடிவு வேற மாதிரி சொல்லுதே. அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு?
நியாயமான கேள்வி. பாட்டு பாடுற நடுவர் ஐயா உங்க பதிலுக்கு பிறகு தானே புரிஞ்சது உங்க ட்ராமா.(இந்த படத்த ஏற்கனவே நாங்க பாத்துட்டோம்ல) ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)
வருந்தத்தக்க அணுகு முறை.
இப்படித்தான் பர்வையாளர்களை அதிகரிக்கனுமா? போட்டியாளர்களும் நடிகர்களா இருக்க மாட்டாங்களான்னு என்ன உறுதி?
முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒரு போட்டியா இருக்க வாய்ப்பில்லையா? sms அனுப்புகிறவர்கள் முட்டாள்களா?
நடுவர்களாக வந்தவர்கள் இலங்கை பாடகர்களா அல்லது நடிகர்களா? (நடிக்க வந்த பாடகர்களா, பாட வந்த நடிகர்களா? குழப்பமா இருந்தா விட்டுறுங்க)
இதுவும் ரொம்ப ஆபத்தான ஆடுகளம் இல்லையா?

ஏற்கனவே இந்த மாதிரியான நாடகத்தை தமிழகத்தின் அலைவரிசைகள் அரங்கேற்றி மூக்குடைந்த கதை உலகறிந்த விடயம். ஒரு அலைவரிசை சிம்ரனையும் இன்னுமொரு அலைவரிசை சிம்புவையும் வாடகைக்கு அமாத்தியது எங்களுக்கு தெரியாதா. தயவுசெய்து தொலைக்காட்சி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். சந்தையை பிடிக்க இதைவிட பல நல்ல வழிகள் இருக்கின்றன.

இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம்.

கியூபாவின் கண்ணீர் கனவுகள்.

PM 11:06 Hisham Mohamed - هشام 5 Comments

::யாவும் கற்பனை::

கொஞ்(ச)சும் மழை, காது நோகாம ஒரு பாட்டு, நெடுந்தூரம் யாருமில்லை கால் நீட்டி வண்டி ஓட்டுற சுகம் இதை விட வேற என்ன வேணும் மது?. ஆஹா பிராமதம்! சோடா புட்டிக்கு ரசிக்கவும் தெரியுதுன்னு சொன்னாள் மது. லூசுத்தனமா எதச் சொன்னாலும் ஆஹா போட நீ இருக்கும் போது செவேரோ சாதூயை மிஞ்சிடுவேன் பாரேன்னு பதில் சொன்னான் ராகுல்.


செவேரோ கியூபாவின் பிரபல கவிஞர்களில் ஒருவர். ராகுலுக்கு ஆறு வயது இருக்கும் போதே அவன் பெற்றோர் கியூபாவின் சென் நிக்கலோஸில் குடியேறிவிட்டார்கள். இவன் அடிப்படை கல்வியை பெற்றது இங்குதான். ஸ்பெய்னின் காலநித்துவத்தில் கசங்கிப்போன சுவடுகளில் இருந்து மீளாத கியூபாவைப்போல அவன் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் வருடங்கள் 19 கடந்தும் மாறவில்லை.

தாயகத்தை இன்னும் அவனுக்கு ஞாபகப்படுத்த இருக்கும் ஒரே ஒரு சொத்து மது. கம்பியில்லாமல் காற்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டே கதை சொல்லும் ஒரு வழக்கம் ராகுலுக்கு கார் வாங்கிய பிறகு.

''ரெண்டு மூனு நாளா உன்ன மாதிரியேதான்'' என்று வாய் திறந்தவன் மூடுவதற்குள் ''என்ன என் மாதிரியான்னு?'' கேட்டு முடித்தாள் மது. ''ம்ஹ்ஹ்; அழுது கிட்டே இருக்கு வானம்'' எப்பவும் அவளை கிண்டலடிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ப்ரியம்.

காலையில் எழுந்து கடன் தீர்த்து அலுவலகம் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் தவிர ராகுலுக்கு இருக்கும் ஒரே ஒரு தனிமை கில்லர் மது. அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் 40 நிமிடங்கள். இந்த இடை வெளியில் அவன் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் ஏராளம்.

''எனக்கென்ன கவலை மது ஓபீஸ் - வீடு - ஓபீஸ் வீடுபோனால் என்னை காதலிக்க டீட் டீட் டீட் டீட '' தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தால் ஸ்பெனிஸ் மொழியில் ஒரு பெண் குரல்.

''நீங்கள் அழைத்த வாடிக்கையாளருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை''
தொடரும்....

யார் நாயகன்? கமல், மணி, ராஜா

AM 12:11 Hisham Mohamed - هشام 10 Comments

ரொம்ப நாளைக்கு பிறகு ஏற்கனவே பலமுறை பார்த்த நாயகன் படத்தை மீண்டும் பார்த்து முடித்தேன். எல்லா படங்களையும் பல தடவை பார்க்க முடியாது ஆனால் சில படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் புதிதாய் பார்க்கலாம் (பாட்ஷா,முதல் மரியாதை, படையப்பா). அப்படியொரு படம் இது.
நாயகன் படத்த ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதுசா ஏதாவது தோணும். அந்த காலத்தில் மும்பை தாரவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்கிற ஒருவரின் உண்மைக் கதையாம் நாயகன் தெரிந்தவர்கள் சொன்னார்கள்
.
நாயகன் திரைப்படம் கமல் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய படம் அல்லது மணிரத்னம், கமலுக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படம் எப்படியும் சொல்லலாம்.
நாயகன் படத்தில் வாலிபனாகவும் முதுமை பருவத்திலுமான இரண்டு தோற்றத்திலும் நடிப்பிலும் சரி பொடி லெங்க்வேஜிலும் சரி வேலு நாயகராக வாழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், மணிரத்னம் இவர்களோடு சரிசமமாக நாயகன் படத்துக்கு பின்னணி இசையாலும் பாடல்களாலும் பங்களிப்பு செய்த இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்.
டைம்ஸ் இதழின் சிறந்த 100 படங்களில் இடம் பிடித்த நாயகன் படத்தை இன்னுமொருமுறையும் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட ஒரு படத்தில் எப்படி ஒரு நாயகனை தேடுவது...
நான் ரசித்த சில காட்சிகள்
# பொலிஸ் அதிகாரி கமல் மீது தண்ணீரை பாய்ச்சும்போது தனி ஆளாக நிற்பது. பிறகு பொலிஸ்காரர் அடிக்கப்போறியான்னு கேட்கும் போது அதற்கு கமல் ''நான் அடிச்சா நீ செத்துருவ''ன்னு சொல்வது
# க்ளைமெக்ஸில் கமலின் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்பான் அதுக்கு ''தெரியலேயப்பா''ன்னு வேலு நாயக்கர் சொல்வார்.
# நீங்க யாரு எது தப்பு எது சரின்னு பார்த்து தண்டனை கொடுக்கன்னு மகள் கேட்க வாக்குறுதி கொடுத்துட்டேன்பாரு வேலுநாயக்கர்.
# தப்பில்ல, நாலு பேர் சாப்பிட ஒதவும்னா எதுவுமே தப்பில்ல..
# நிறுத்தவே மாட்டீங்களா? நிறுத்துறேன் அவங்கள நிறுத்தச்சொல் நான் நிறுத்துறேன்...........
நீங்க ரசித்ததையும் சொல்லுங்கோ.........

ஐயோ நானில்லை மழைத்துளி !

PM 3:01 Hisham Mohamed - هشام 1 Comments



ஞாயிறு மாலை ஜன்னலோரத்தில்

(கவிதை எழுத) தெரியாமல் ஒரு கவிதை எழுதுகிறேன்

மழையுடன் மப்பும் மந்தாரமுமாய் வானம்

என் வீட்டுச்சாலையோரம் எங்கும் ஒரே அமைதி

ரசிப்பதற்கு ஒன்றுமில்லை பஞ்சவர்ண குடைகளும் கூட

திரும்பும் போது ஒரு மழைத்துளி என் முகத்தில்

தேடினேன் எங்கிருந்து வந்ததென்று

ஆ! அங்கே ஒரு மின் கம்பம்

கம்பி நெடுவே தப்பிப் பிழைத்த சில துளிகளும்

தற்கொலை செய்து கொள்கின்றன

என்னை தேடி வந்த மழைத்துளி என்ன சொல்ல வந்தது?

நீ சொல்லாத ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நியாயமில்லாமல் காரணமில்லாமல் கனவுகள் ஆயிரம்

யாருக்கு தெரியும் யார் கண்பட்டதோ

இந்த நகரத்தில் இனி எனக்காக யார்

காதல் செய்ய யாருமில்லை

வலிகள் ன ந

க ந வாக்குறுதி

மௌனம்


தடுமாறிப்போனேன் மழைத்துளியா இது !


குறிப்பு :- மழைத்துளி எழுதியதால் காய்ந்து போயிருக்கும் தேட வேண்டாம்.

இது ஜிஹாதா? கோழைத்தனமா?

PM 9:10 Hisham Mohamed - هشام 3 Comments


Fort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.

அமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.

பாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.

ஜிஹாத் என்றால் என்ன? நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா?

சமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா?

இப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.

சம்பவத்திற்கு பிறகு ...

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

உண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...

ஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.
அமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்

நான் அடிச்சா தாங்க மாட்ட!

PM 11:03 Hisham Mohamed - هشام 3 Comments


வருகிற சோதனைகளும் வேதனைகளும் இன்னுமொருவருக்கு சொல்லி அழுவதற்கல்ல. அதன் மூலம் வாழ்க்கையை படித்து அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

எனக்குத்தான் யாருமில்ல எனக்குத்தான் எல்லா கஷ்டமும் இப்படி நினைப்பவர்கள் நம்மில் பலர். இவர்கள் என்னை பொறுத்தவரை வாழத்தெரியாத கோழைகள்.

எதுக்கெடுத்தாலும் அடுத்தவன் முதுகு சொறியனும்னு எவ்வளவு காலத்துக்கு பாத்துக்கிட்டு இருக்க போறோமோ? சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க. இத விட்டுட்டு நான் அடிச்சா தாங்க மாட்டென்னு மொக்கை சிந்தனை சொல்ற பாடல்களை கேட்டு கெட்டுப்போயிடாத அப்பு அப்பிடீன்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு. சொல்லிட்டேனுங்கண்ணா..

மொக்கைன்னு சொல்லும் போது ஞாபகத்தில் வந்ததை தட்டிவிடுகிறேன். கொஞச்காலம் நம்ம ஊர் பதிவர்கள் சிலருக்கு ப்ளக் புளு தாக்கிடுச்சி பாருங்க எதுக்கெடுத்தாலும் அடுத்த தேசத்து தாக்கம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கருத்து. உங்க குமுறல்களை சொல்லி நல்லா போய்க்கிட்டிருக்கிற தமிழ் பதிவுலகத்திலயும் கும்மியடிச்சிடாதீங்க. தமிழ் தானாக வளரும் அதை விட்டுட்டு உங்க ஊர் தமிழ் உங்க தேசத்து தமிழ் எதுக்கு? நம்ம பதிவுகளில 75 சதவீதத்துக்கு மேல அடுத்த தேசத்து சொத்தைதான் விமர்சிக்கிறோம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

''பதிய வந்ததை விட்டுட்டு ஏதேதோ தட்டிக்கிட்டிருக்க.. ஓ இப்ப இது கூட பேஷன் தானே கோவிந்தன் வீட்டு நாய் வயசுக்கு வந்தாலும் பதிவு போடுறாங்கப்பு'' - ராமசாமி அண்ணே

Nick Vujicic - 4th Dec 1982 (Melbourne, Australia)


மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவறாக பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.


''வாழ்க்கைல அதிஷ்டம்னு ஒன்னும்மில்லை. சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான் மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம்ம வாழ்க்கையில எதையும் தப்பா கொடுக்க மாட்டாரு ஏதாவது காரணத்தோடுதான் எதையும் செய்வார். எனக்கு இப்போ 23 வயசாகுது வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்துக்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டுபன்னனும்.'' என்கிறார் நிக்.


நல்ல பேச்சாற்றாலால் இளைஞர்களை கவர்ந்த நிக்கினின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்த புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்னுமில்லைன்னு சொல்லும் நிக் தான் கைகளற்றவன் கால்களற்றவன் என்று வருந்தப்போவதில்லை என்கிறார்.

அடுத்த தடவை சோதனை மேல் சோதனை என்று நாம் வருந்த முடியாது.


ஜனாதிபதி ஆலோசகர்களுக்கு ரூபா 1.25 கோடி!! தோட்டத்தொழிலாளரின் நாள் சம்பளம் 270 ரூபா !!

PM 8:51 Hisham Mohamed - هشام 9 Comments


இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசாகர்ளாக 38 பேர் கடமையாற்றுகின்றனர்.

அவர்களில் 22 பேருக்கு 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் மாத்திரம் 1,17,29,653,36 ரூபாய் என்கிறார் அரச அமைச்சர் தினேஷ் குணவர்தன.

16 பேர் சம்பளம் பெறாமல் கடமையாற்றுகின்றனர்.( சம்பளம் பெறாமல் இவர்கள் பல சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் ராமசாமி அண்ணே சொல்றார்.)

இந்த ஆலோசகர்ளில் அதி கூடிய சம்பளமாக 60,000 ரூபா வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.

சில ஆலோசகர்களுக்கு நான்கைந்து அரச வாகனங்கள், விமான பயணச்சீட்டுக்கள், அமைச்சர்களை விட உயர்ந்த அந்தஸ்து வழங்கபடுவது உண்மையான்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.


கந்தசாமி விமர்சனம், எந்திரன் எப்ப வரும்? அத்துடன் இன்னும் பல மொக்கை பதிவுகளால் பதிவுலகம் பரபரப்பான தருணத்தில் இவர்களை பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம்.

அரசியல்வாதிகளும்இ சங்கங்களும் பல தடவைகள் தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை தட்டிக்கேட்டாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் தந்திரமான காய் நகர்த்தல்களால்; போராட்டங்கள் சோரம் போன கதை உண்டு ஏராளம்.

பிச்சையெடுப்பவனை விட குறைவாக் உழைக்கும் ஓர் வர்க்கம் ஊதியம் பெறுகிற கொடுமையை எங்க போய் சொல்லுவேன்.(பிச்சைக்காரனை உதாரணமாக்கியதற்கு.....)
இலங்கையில் சராசரி ஊழியர் ஒருவர் பெறும் குறைந்த மாதாந்த சம்பளம் 11700 ரூபா.


நம்மிடம் சாதாரணமாக ஒரு கேள்வி எழுப்புவோம். ஒரு நாளைக்கு நம் செலவு குறைந்தது 500 ரூபாயாவது இருக்காதா? ஆனால் இலங்கையின் அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செலுத்துகிற முக்கியமானவர்களுக்கு நாள் சம்பளமே 270 ரூபாய்தான்.
அவங்களுக்கு அவ்வளவு கொடுக்காதீங்கன்னு சொல்லல,(அத சொல்ல.....)
இவங்களுக்கு இவ்வளவு கொடுங்கன்னு சொல்றேன்.

தெருவிற்கு ஆயிரம் திவ்யாக்கள்.....

PM 9:05 Hisham Mohamed - هشام 3 Comments


திவ்யா என்கிற அழகான சித்திரம் இன்று கடலை கடையில்!
சொல்லப்பட்ட ஒரு உண்மைக்கதை சிந்தித்து எழுதுகிறேன்.

எங்காவது ஒரு மனநல மருத்துவமனையில் தேடிப்பாருங்கள் திவ்யாவின் மனதை...



பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் மனசுக்குள் சிறகடித்துப்பறக்க காலைப் பொழுதில் முதல் நாள் உத்தியோகத்திற்கு செல்ல பஸ் எடுக்கிறாள் திவ்யா. புட்போட் கைப்பிடியை இறுக்கப்பிடித்தவளுக்கு வாழ்க்கையை வாழத்தெரியாமல் போனது வேதனை.

தான் கடமை புரியப்போகும் இடம் அவளுக்குள் ஏற்படுத்திய பிரமிப்பில் தன்னை மறந்து சிந்தித்திருக்க மாட்டாளா?

புதிய இடத்துக்கு வேலைக்கு போகிறோமே !அங்க எல்லாரும் எப்படி இருப்பாங்க, தொழில் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்க மாட்டாளா?

அம்மா அப்பா உறவினர்கள இவர்களை விட நெருங்கி சொந்தம் கொண்டாட திவ்யாவுக்கு யாரும் இல்லை அவள் கடமையின் முதல் நாள் கையொப்பமிடும்வரை.

புதிய அலுவலகம் நண்பர்கள் என தன் வாழ்க்கையில் பல புதிய அத்தியாயத்திற்கான பக்கங்கள் திறக்கப்பட்ட பூரிப்பில் திவ்யாவின் நாட்கள் திறந்தன.

வீடு அலுவலகம் வீடு என வட்டமடித்தவள் மனதின் பாஸ்வார்ட் அறிந்தவன் எவனோ லொக்இன் ஆனதில் தடுமாறிப்போனாள்.

நட்போடு ஆரம்பித்த புதிய உறவு பல படிநிலைகளை கடந்து சினிமா அரங்கு வரை வளர்ந்தது.

இந்த காதல் நாடகத்தில் முழ்கிப்போயிருந்தது திவ்யாவின் மனது.

'' இவளத்தான் கட்டிக்கப்போறேன்'' என்ற போலியான வசனம் தனக்கு ஒரு முகவரி கொடுத்ததாய் நினைத்தவள் ஏமாற்றமடைந்தாள் ரயில் தண்டவாளம் புரண்டதில்.

அலுவலகத்தில் தனித்துப்போனவள் மனதுக்குள் அடக்கி வைத்ததை யாருக்கும் சொல்லவில்லை. தனிமையை விரும்பினாள், சந்தோசத்தை மறந்தாள், கடமையில் கவனம் சிதறியதால் வேலையை விட்டு தூக்கப்பட்டாள்.

இதை விட இழப்பதற்கு ஒன்றுமில்லாதது போல அலுவலக வாயில் கதவருகில் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்களையும் குழி தோண்டி புதைத்துவிட்டு புறப்பட்டது திவ்யாவின் உடல்.

வீட்டிலும் இவள் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாகத்தான் இருந்தன. பெற்றோரிடமும் கதைப்பதில்லை தன் அறைக்குள் இருந்து வெளியே வருவதுமில்லை. தன் மனசுக்குள் இருப்பதை சொல்ல எத்தனித்ததுமில்லை. யாருக்கும் அவள் மனது தெரியாது.

அன்றொரு நாள் அதிகாலைப்பொழுதில் திவ்யாவின் அப்பா கையில் பையுடன் அவசரமாக புறப்படுகிறார். பல நாள் சவரம் செய்யாத முகத்துடன் தான் இறங்க வேண்டிய இடத்தை சொல்லி பஸ் நடத்துனரிடம் டிக்கட் வாங்கிக்கொண்டவர் ஜன்னலோரம் தலையை சாய்த்தார். யோசனைகளில் தன்னை மறந்து இறங்கும் இடத்தையும் மறந்துவிட்டார்.


'' ஐயா மனநல மருத்துவமனை வந்துட்டு இறங்குங்க '' என்றார் பஸ் நடத்துனர்.

ஒபாமாவும் நானும்.

PM 6:22 Hisham Mohamed - هشام 8 Comments




இன்று மின் காந்த அலைகளில் நான் இல்லை. ரொம்ப யோசிக்க வேணாம். வானொலி தொலைக்காட்சி எல்லாத்துக்கும்; இன்னைக்கு ஓய்வு கொடுத்து இயற்கையை சுவாசிக்கிறேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு ஓய்வு. என்ன கொஞ்சம் வேலை இருந்தது இருந்தாலும் ரிலாக்சாக முடிச்சுட்டன்.

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. பதிவுலகில் நான் காணாமல் போன நாட்களில் எத்தனையோ விடயங்கள் நடந்திருக்கும். அப்புறம் நிறைய பேர் விருதுகளெல்லாம் தந்திருந்தீங்க கொஞ்ச கொஞ்சமா தேடிபிடிச்சு ஏத்துக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்கனும். இன்னும் நிறைய பேசுவோம் வரும் ஞாயிறு (23) வலைப்பதிவர் சந்திப்பில்.

கொஞ்ச நாளைக்கு முதல்ல எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதுல இருந்த விடயங்கள முழுமையா படிச்சதுக்கப்புறம் அனுப்பியவருக்கு பதில் மடல் அனுப்பி அந்த உண்மைக் கதையை முழுமையாக தெரிஞ்சிக்கிட்டு எழுதி வைச்சிருக்கேன் ஒரு பதிவு. சில மாற்றங்கள் செய்து விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

அது இருக்கட்டும் அப்பு ஓபாமாவை எதுக்கு கூப்பிட்டீங்க?

அது ஒன்னுமில்ல மனுசன் இப்ப குடும்பத்தோட செம ஜாலியா விடுமுறையில இருக்காரு நானும் இன்னைக்கு விடுமுறை பாருங்க அதுதான்.

பொருளாதாரம், சுகாதாரம், G20 மாநாடு என பல அலுவல்களுக்கு மத்தியில் இப்பதான் ஒபாமா கொஞசம் ஓய்வெடுக்கிறார்.



மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்க ஜனாதிபதி இப்போ இயற்கை தளங்களை பார்வையிடுகிறார். இறுதியாக தன்னுடைய குடும்பத்தாரோடு கிராண்ட் கெனியோன் என்கிற மலைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் ஒபாமா.



கிராண்ட் கெனியொன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய தேசிய பூங்காவும் இங்கேதான் இருக்கிறது.


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டும் தான் பதவியில் இருந்த போது ஓய்வு நேரங்களை அதிகம் கழித்தது கிராண்ட் கெனியொனின் முக்கிய இடங்களில்தான். நம்ம சூப்பர் ஸ்டார் அடிக்கடி இமயமலைக்கு போற மாதிரி அமெரிக்கர்களுக்கு கிராண்ட் கெனியொன்.


இன்னும்.........

நண்பர்கள் மன்னிக்கனும்

PM 2:55 Hisham Mohamed - هشام 7 Comments


பல நாட்கள் கழித்து பதிவுலகை திரும்பிப்பார்க்கிறேன். நலம் அறிய வந்த நண்பர்கள் மன்னிக்கனும். இருந்த வேலைகள் காரணமாகவும் மனக்கவலை காரணமாகவும் பதிவெழுதும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த 24ம் திகதி என் பிறந்ததினத்தை ஞாபகம் வைத்து வாழ்த்துச்சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

துணிச்சலோடு சவாலை சந்திக்க தயாராகிவிட்டேன் நீங்கள் கொடுத்த தைரியத்தால். சந்திக்க சவால்கள் இல்லாமல் போனால் சாதிக்க முடியாமல் போய்விடும்னு அடிக்கடி ராமசாமி அண்ணே சொல்லுவார்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

பாலை வனத்து நாட்கள்.

PM 6:27 Hisham Mohamed - هشام 0 Comments


இந்த பாலை வனத்தில் சோலை தேடி, எனக்காக பேசுகிறது என் வலைப்பூ.

நான் நிற்கும் இந் பாலைவனத்தில் நண்பர்களைப்போல நிறைய மரங்கள்ஆனால்
அவை நிழல் தருவதில்லை.
கொஞ்சம் சாய்ந்து பெருமூச்சு விட அவை இடம்
தருவதுமில்லை. வஞ்சக எண்ணம் கொண்ட அவற்றின் உடம்பெல்லாம் முட்கள்.

இங்கு நட்பு என்று நான் பல தடவை ஏமாந்துப்போய் கானல் நீரை அருந்தியதும்
உண்டு. நானே விரும்பி வந்த சுற்றுலா வெறுத்தொதிக்கி போக முடியாதுபோகவும்
மாட்டேன். முழுமையாக இதை அனுபவிக்கப்போகிறேன்.

நட்பு எனும் புனிதத்தை இனியும் இந்த பாலைவனத்திற்கு கொடுக்க எனக்கு
மனசாட்சி இல்லை.

நல்ல பசுமையான நண்பர்களின் நினைவுகள் இன்றும் என்னை விட்டுநீங்காததால்
இந்த கொடுமை என்னை ஆட்கொல்லப்போவதில்லை.

ராமசாமி அண்ணே அங்கே யாரோ நெருப்பு தேடி அலைகிறார்கள் கூப்பிடுங்கள் என்
கோபங்களை அள்ளித்தருகிறேன் ஒரு வேளை இந்த பாலை வனம்தீப்பிடித்தெரிந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை.


பாலை வனத்து நாட்கள் தொடரும்....

இராணுவ வீரனால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி

PM 4:23 Hisham Mohamed - هشام 8 Comments


ஈராக், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் அமெரிக்க பயங்கரவாதிகளால் தொடர்ந்தும் கற்பழிக்கப்படுகிறார்கள். இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவை சட்டத்தின் முன் செல்லாக்காசு.

ஆதாரங்களை அழித்து சட்டப்படி குற்றம் புரியும் தீவிரவாதிகளை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்?
எந்த நீதிமன்றத்தில் போய் நீதி கேட்க முடியும்?

தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று அலறும் தாய் பொய் சொல்கிறாள். தவறு செய்த தீவரவாதி உண்மை சொல்கிறான்.
கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தும் கேட்டுத்தான் என்ன பலன்.

சட்டப்படி நடத்தப்படுகிற ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் கொலைகள் இன்னும் எத்தனையோ கொடூரங்கள் கணக்கில் வருவதில்லை. அவை கணக்கெடுக்கப்படுவதில்லை.

Former U.S. soldier Steven Green got life in prison after being convicted of murdering four Iraqis.

கடந்த வியாழக்கிழமை (28) 14 வயது சிறுமியை கற்பழித்து அவளையும் மூன்று குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்ததற்காய் பகிரங்க மன்னிப்பு கோரினான் அமெரிக்க இராணுவ வீரன் ஸ்டீவ் க்ரீன்.

''நான் ஒரு குடும்பத்தை அழிப்பதற்குகாரணமாகிவிட்டேன். மீண்டும் அவர்களை திரும்ப பெற முடியுமென்றால் அது என்னால் முடியாது.'' என்று பயங்கரவாதி ஸ்டீவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினான்.(ஸ்டீவ் க்ரீன் கோரிய மன்னிப்பு அறிக்கை) பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தமை, அவள் பெற்றோர் மற்றும் 6 வயதான சகோதரியை கொலை செய்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கென்டக்கி மாவட்ட நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டான் ஸ்டீவ்.

பயங்கரவாதம் எங்கே விதைக்கப்படுகிறது? அதை விதைப்பவர்கள் யார்?
தன் மகள் கற்பழிக்கப்படுவதை கண்களால்; பார்க்கிற கொடுமையை ஒரு தந்தையாக ஒரு தாயாக இருந்து யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
அத்;தனை கொடுமைகளும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டீவ்வைப்போன்ற எத்தனையோ தீவிரவாதிகள் இன்னும் கடமையில் இருக்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டீவ்வுடன் அவனுடைய சகாக்கள் 5 பேர் அமெரிக்க இராணுவத்தால் பல குற்றச்செய்ல்கள் புரிந்த காரணத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்னர். பின்பு அவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 மாதம் முதல் 110 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


உன் போன்ற தீவிரவாதிகளை செருப்பால் அடித்து கொலை செய்ய வேண்டுமென்று என் மனசாட்சி உத்தரவிடுகிறது.

அன்னை சிந்தும் கண்ணீர்

AM 12:44 Hisham Mohamed - هشام 7 Comments

பல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை.

ஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.

குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.

ரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம் என்றார் நபிகள் நாயகம்.

ஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.

ஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப் புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்த்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன. தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.

சின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்."சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது. என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்." அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.


பரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை. தாய்மாரின் அன்றாட வாழ்நாளில் ஓய்வுக்கு கிடைப்பது ஆண்களை விட குறைந்த நேரம்தான். நாளொன்றுக்கு அமெரிக்க ஆண்கள் தாய்மாரை விட 40 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இதுவே இத்தாலி ஆண்கள் 80 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் நாம் எம் தாய்க்கு என்ன செய்யப்போகிறோம்.

பசி தூக்கம் ஓய்வு இல்லாத உன் அகராதியில் உனக்கான தினத்திலும் நீ ஓய்வெடுக்கப்போவதில்லை. அம்மா உன்னிடம் நான் கற்றுக்கொண்டது எராளம். என்னுடைய ஒவ்வொரு உயர்விலும் என்னை தாங்கி நிற்கிறாய். ஒவ்வொரு சரிவிலும் என்னை தட்டிக்கொடுக்கிறாய்.


வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்.


என்றென்றும் நீ நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

உங்கள் பதிவு நட்சத்திர அந்தஸ்து பெற வேண்டுமா?

AM 12:04 Hisham Mohamed - هشام 3 Comments

உங்கள் பதிவுகளைப்பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா?


அழகான 5 நட்சத்திரங்களை உங்கள் உவ்வொரு பதிவின்போதும் பெற்றுக்கொள்ள முடியம். உங்கள் வலைப்பூ (Blog,Wordpress,typepad)எந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.  

குறித்த விட்ஜட்டை முற்றிலும் இலவசமாக எவ்வித பதிவுகளுமின்றி பெற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் வாசகர்களின் திருப்தியை உடனடியாக அறிந்து கொள்ளமுடியும்.  

உங்கள் தளத்திற்கு வருகை தருகிறவர்களில் சிலருக்கு பின்னூட்டமிட நேரமும் பொறுமையும் இருப்பதில்லை ஆனால் இந்த விட்ஜட்டின் மூலம் ஓரிரு நொடிகளில் வாசகரின் திருப்தியை  அறியலாம்.  

நட்சத்திர விட்ஜட்டை பெற இங்கே சொடுக்குங்கள்.