என் நண்பன்!

AM 12:59 Hisham 7 Comments

ஏதோ ஒரு தெரியாத தொலைபேசி இலக்கத்துல இருந்து ரெண்டு மிஸ் கோல். ஒரு சில மணித்தியாலத்திற்கு பிறகு மீண்டும் அழைப்பெடுத்து பார்த்தேன். மறுமுனையில் 'அறிவிப்பாளர் எப்படி இருக்கீங்கன்னு' ஒரு குரல். உடனடியா மதிக்க முடியல. 'சவுத் ஆப்ரிக்கால இருந்து தீலீப் பேசுறேன்டா..' திலிப் என் பள்ளிக்காலத்து நல்ல நண்பன்.பல வருடங்களுக்கு பிறகு அவனோட குரல கேட்குறேன். கொஞ்ச நேரம் என்னையே மறந்து பேசிட்டிருந்தேன். ஒரு சில நிம
ிடம் வசந்த காலத்தின் வாசல் திறந்தேன். கடைசியா 'இங்க வந்து ஆறு வருசமாச்சு இப்போதான் இந்த தூரமும் தனிமையும் எவ்வளவு தூரம் அன்பை தேட வைக்குதுன்னு புரியுது.. டேய் வேலை இருக்கு வரும் போது கட்டாயம் சந்திக்கனும்னு' சொல்லிட்டு போன கட் பண்ணி ரொம்ப நேரமாகியும் ஒன்னு ரெண்டு ஞாபகங்கள் இன்னும் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கு..

அவனோட ஒரு சில நிமிட உரையாடல் நண்பர்களோடு இருந்த நல்ல பொழுதுகளின் நம்பிக்கையை உணர்த்தியது. திரும்பும் இடமெல்லாம் நண்பர்கள்னு ராஜா போல ஒரு வாழ்க்கை என் இலட்சியத்துக்காக அத்தனையும் துறந்து பட்டணம் வந்தேன். பறந்தோடிய நாட்களின் முடிவில் நண்பர்கள் பல திசைகளில் நாடு கடந்து வாழ்கிறார்கள். காலம் தலைநகரின் வாழ்க்கை வட்டத்தில் இப்படியும் நண்பர்கள்னு இரண்டு விதமாகவும் காட்டியது. இப்போது சறுக்கல்களிலும் சந்தோசங்களிலும் கூட இருக்கும் நண்பர்கள் என் வெற்றியின் ரகசியம்.

நமக்குள் இருக்கும் 'நான்' யாருன்னு தேடனும். முகவரிய தொலைச்சிட்டு மிமிக்ரி பண்றதுல லாபமில்ல. 
 


என்னோட நண்பர்கள நினைக்கும்போது பெருமையா இருக்கு அவங்ககிட்ட இருந்து நான் இன்னும் படிக்க வேண்டி இருக்கு. சுயநலமில்லாத அவங்களோட அன்பு இந்த உலகத்துல எதுவுமே விலை மதிப்பில்லன்னு சொல்லும். அத்தனையும் செஞ்சிட்டு மேடையேறி நான் கை தட்டு வாங்கும் போது பின் வரிசையில நின்னு இதயத்தால சிரிக்கிற நீதான் என் நண்பன். வெட்கப்பட்றேன் சில நேரம் மனிதர்கள் போல சுயநலமா இருந்ததுக்கு. எதிர்பார்ப்பில்லாத அன்பு வாழ்க்கையை உணர்த்தும்னு சொல்லுவாங்க. நாம எப்பவும் உண்மையா வாழ நல்ல நண்பர்கள் இருக்கனும். அவங்கதான் எப்பவும் நமக்கு நல்ல கண்ணாடி.

ஒரு குழந்தையின் சிரிப்பு நம் மனதுக்கு அவ்வளவு ஆனந்தத்தை தருகிறதே ஏன்னு யோசிச்சு பாத்திருக்கோமா? அதில் வஞ்சம் இல்லை. ஆனால் நாம இப்ப யாரயாவது பாத்து சிரிக்கக் கூட பல தடவை யோசிக்கிறோம். நான் எதுக்கு சிரிக்கனும்னு ஒரு இருமாப்பு. நம்மை சுத்தி ஒரு இரும்புக்கதவு போட்டு பூட்டி வைச்சிருக்கோம். எதுக்காக? சமூகம், அந்தஸ்து, பணம் இன்னும் என்னென்னவோ. இதனாலதான் மனுசன் குழந்தையாவே இருக்கிறதில்ல. கடவுள் ஒன்னும் நமக்கு முதுமைய தாரதில்ல நாம்தான் தேடிப்பெற்றுக்கொள்றோம். இனியாவது என்னோட குழந்தைதனத்தை நான் தேடக் கூடாதா. ஒரு அழகான பட்டாம் பூச்சியை எவ்வளவு கொடூரமா கொலை பண்ணியிருக்கோம் நம்ம சுயநலத்துக்காக.

என் துயர் நெடுகிலும் என்னோடு துணையிருந்து. ஏறும்போதெல்லாம் ஏணியாய் தோள்கள் தந்த என் நண்பர்களுக்கு இந்த பதிவு.

பெயர் குறிப்பிட்டால் குற்றமாகிவிடும். இப்போது இந்த நிமிஷம் உன் உள் மனது ஒரு உண்மை சொல்லும் நீதான் என் நண்பன் என்று பூட்டு போட்டு மறைத்து விடாதே நீ மனிதனாகி விடுவாய்.

நடு சாமத்திலும் உன் கதவு தட்டுவேன் உரிமையோடு என் பதிவை வாசிச்சு பாருன்னு யேன்னா நான் உன் நண்பன்.

மார்கழி மாதமும் பள்ளிக்கால ஞாபகங்களும்..

AM 12:25 Hisham 2 Comments


நத்தார் மாத குளிர் வேளையில் என் இராக்கால பதிவொன்றிற்காய் தட்டியது என் சிந்தனைக்கதவு விட்டு விட்டு கூரையில் விழும் பனித்துளிகளின் சத்தமும் சில்லென வீசும் மார்கழிக்காற்றும் தெளிந்த வானமும் அடிக்கடி எனக்கு பள்ளிக்கால விடுமுறையைத்தான் இன்றும் ஞாபகப்படுத்துகிறது.

பள்ளிக்கால அதிகாலைப்பொழுதும், ஆரம்பிக்கும் போதே என் காதில் விழும் சிந்தனைகளும் இப்போதைய என் வாழ்க்கை மாற்றத்தில் என்னை மூழ்கி சிந்திக்க வைக்க காரணமாக இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறேன்.


அம்மா எழும்பும்போதே இலங்கை வானொலியை காலை நேர செய்திக்காக இயக்கி விடுவார்.

எழும்போதே சமயச் சிந்தனைகள் தான் காது நிறைக்கும். அதில் தமிழ் தெரிந்த பிக்கு ஒருவரின் சிந்தனையும் வரும் என் ஞாபகம் சரியாக இருந்தால் அது 'போதி மாதவனின் நற்சிந்தனைகள்'.

எழுந்தும் எழாமலும் பனி படர்ந்த என் கிராமத்து வீட்டில் தேநீர் கோப்பையுடன் மீண்டும் ஒளிந்து கொள்வேன் போர்வைக்குள்ளே.

பொங்கும் பூம்புனலின் மந்திரக்குழலிசையுடன் பரபரப்பாக தயாராகி பள்ளி செல்லும் வழியில் ஒரு நாள் கேட்ட மார்கழிப் பூவே பாட்டு சத்தியமா இன்னும் என் ஞாபகத்தவிட்டு போகல.


வீட்ல இருந்து கொஞ்சம் தூரம் நடந்து போனா அந்தோனியார் பள்ளிக்கூடம் வரும். பள்ளி மணி அடிக்கும் வரை தேவாலயத்தின் வாசலில் நண்பர்கள் கடந்த நாளின் சாகசங்களை பகிர்ந்து கொள்வார்கள். பல நாட்கள் பள்ளி மணி அடித்த பிறகுதான் வந்தேன் என்று எல்லைச்சுவர்கள் உண்மை சொல்லும்.


வாழ் நாளின் அதிக நாட்கள் சிந்தனைகளோடுதான் தொடங்கியது.
அம்மா எழுப்பும்போதே வானொலி, பள்ளியில் பிதா ஹிலேரியன் பர்னான்டோ நாளும் சொல்வார் ஒரு நற்சிந்தனை.


அந்த அழகிய நாட்களின் பசுமையான நினைவுகளுடன் என் எண்ணம் சிறகடித்து பறக்கிறது.

உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தாய்..

PM 11:34 Hisham 1 Comments

தொழில் ரீதியான கடந்த கால வாழ்க்கை அதிக அழுத்தங்களையும் சவால்களையும் தந்ததால் முட்டி மோதி வெளியே வந்து சிந்திக்க கொஞ்சம் நேரமாச்சு.ஆனால் கடந்த வருடமும் இந்த வருடத்தின் ஒரு சில மாதங்களும் வாழ்க்கை பற்றியும் மனிதர்கள் பற்றியும் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

போன வருஷத்துல இருந்து கட்டுவதும் இடிப்பதும்னு சின்ன புள்ள விளையாட்டு மாதிரி கடந்து போயிடுச்சி. திரும்ப கட்டத்தொடங்கியிருக்கோம் கடவுள்தான் காப்பாத்தனும். ஒவ்வொரு முறையும் இடிந்து விழுறது கட்டிடம் இல்ல என்னோட கனவுகளும் உழைப்பும்தான் கூடவே வீண்விரயங்களும். இந்த இடிபாடுகளுக்குள் சிந்தனைகளும் சிக்கிக் கிடந்தன.. பதிந்தால் பலருக்கும் மனம் நோகும், சிந்தித்தால் விழித்துக்கொள்ளலாம். நான் விழித்துக்கொண்டேன்.

ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்பட்டு தடை தாண்ட  படும் பாடு சொற்களில் அடங்காது..... நண்பன் இப்படி சொல்லலாமான்னு யாராவது கேட்டால் சொல்லித்தான் ஆகனும் ஒரே தடையை புதுசு புதுசா எத்தனை முறை தாண்டுறது.

கிராமத்து வாழ்க்கை மீண்டும் அழைக்கிறது. இனி எனக்காக கொஞ்சம் பாடுபடலாம்னு நினைக்குது.

அழுத்தங்களை மறந்து அமைதி தேடிய என் சிந்தனை பயணத்தில் கொஞ்சம் ஆறுதலும் நம்பிக்கையும் தந்தது "itssoldier" என்கிற தலைப்பில் தனித்துப்போன ஒரு இராணுவ வீரன் தன் ஆத்ம திருப்திக்காய் youtubeஇல் இசைக்கும் பாடல் ஒன்று.

"பிறர்க்காகவே அழுதேன் அன்று..
எனக்காக இன்று அழவோ..
எனக்காருமே துணை இல்லை என்று வானம் கூட வருமோ..

ஒரு நொடியும் உனை மறவாத ஒரு வரம் தான் கேட்டேனே
ஒரு மூலை கதியினில் என்னை கதையாக சேர்த்தாயே

உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தாய் போ
"