இது ஜிஹாதா? கோழைத்தனமா?


Fort Hood பாதுகாப்பு தளத்தில் ஹஸனின் துப்பாக்கி முனையில் 13 பேர் பலியான நிகழ்வு ஆட மேடை தேடியவனுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது.

அமெரிக்க பாதுகாப்பு தளங்களில் ஒன்றான Fort Hood இல் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரியும் நிடால் மலிக் ஹசன் சக பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு. கட்டியெழுப்பபடும் நல்லிணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் இன்னுமொரு செப்டம்பர் 11.

பாதுகாப்பு தளத்தில் நுழைந்த ஹசன் தான் சொந்தமாக வாங்கிய துப்பாக்கியில் சம்பவ தினம் மருத்து பரிசோதனைக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வந்திருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது '' இறைவன் மிகப் பெரியவன்'' எனக் கோசமிட்டபடி வேட்டுக்களை தீர்த்தான். 13 பேர் தளத்தில் பலியானதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலை பலரும் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது ஜிஹாத் என்று பெயர் வைத்து கருத்து சொல்வது வேதனைக்குரியது.

ஜிஹாத் என்றால் என்ன? நிராயுதபாணிகளையும் பெண்களையும் கொலை செய்வதா?

சமயத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்துவது சரியானதா?

இப்படி பல கேள்விகளும் வேதனைகளும் உள்ளே புதைந்து போய் கிடந்தாலும், உன் போனற மந்த புத்தியுள்ளவாகளால் அவை வெளிக்காட்டப்படும் விதம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான வெறுப்புக்கு கதவு திறக்கிறது.

சம்பவத்திற்கு பிறகு ...

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் போது பள்ளிகளுக்கருகில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

உண்மையான முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈமெயில் மூலமாக மரண அச்சுறத்தல்களும் கசப்பான கடிதங்களும் குவிந்துள்ளன...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் 3572 முஸ்லிம்கள் எந்த கோணத்தில் நோக்கப்படுவார்கள்...

ஹசனின் துணிவு ஒரு கோழையின் செயல்.
அமெரிக்க முஸ்லிம்களின் வருங்காலம் இருளில்


நான் அடிச்சா தாங்க மாட்ட!


வருகிற சோதனைகளும் வேதனைகளும் இன்னுமொருவருக்கு சொல்லி அழுவதற்கல்ல. அதன் மூலம் வாழ்க்கையை படித்து அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

எனக்குத்தான் யாருமில்ல எனக்குத்தான் எல்லா கஷ்டமும் இப்படி நினைப்பவர்கள் நம்மில் பலர். இவர்கள் என்னை பொறுத்தவரை வாழத்தெரியாத கோழைகள்.

எதுக்கெடுத்தாலும் அடுத்தவன் முதுகு சொறியனும்னு எவ்வளவு காலத்துக்கு பாத்துக்கிட்டு இருக்க போறோமோ? சிந்தனைகளையும் அறிவுரைகளையும் விட, நம்ம உள்ளங்கை ரேகைகளைவிட, நெற்றியிலிருந்து வழிந்து விழும் வியர்வை துளி பலமானது நம்புங்க. இத விட்டுட்டு நான் அடிச்சா தாங்க மாட்டென்னு மொக்கை சிந்தனை சொல்ற பாடல்களை கேட்டு கெட்டுப்போயிடாத அப்பு அப்பிடீன்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு. சொல்லிட்டேனுங்கண்ணா..

மொக்கைன்னு சொல்லும் போது ஞாபகத்தில் வந்ததை தட்டிவிடுகிறேன். கொஞச்காலம் நம்ம ஊர் பதிவர்கள் சிலருக்கு ப்ளக் புளு தாக்கிடுச்சி பாருங்க எதுக்கெடுத்தாலும் அடுத்த தேசத்து தாக்கம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கருத்து. உங்க குமுறல்களை சொல்லி நல்லா போய்க்கிட்டிருக்கிற தமிழ் பதிவுலகத்திலயும் கும்மியடிச்சிடாதீங்க. தமிழ் தானாக வளரும் அதை விட்டுட்டு உங்க ஊர் தமிழ் உங்க தேசத்து தமிழ் எதுக்கு? நம்ம பதிவுகளில 75 சதவீதத்துக்கு மேல அடுத்த தேசத்து சொத்தைதான் விமர்சிக்கிறோம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

''பதிய வந்ததை விட்டுட்டு ஏதேதோ தட்டிக்கிட்டிருக்க.. ஓ இப்ப இது கூட பேஷன் தானே கோவிந்தன் வீட்டு நாய் வயசுக்கு வந்தாலும் பதிவு போடுறாங்கப்பு'' - ராமசாமி அண்ணே

Nick Vujicic - 4th Dec 1982 (Melbourne, Australia)


மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவறாக பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.


''வாழ்க்கைல அதிஷ்டம்னு ஒன்னும்மில்லை. சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான் மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம்ம வாழ்க்கையில எதையும் தப்பா கொடுக்க மாட்டாரு ஏதாவது காரணத்தோடுதான் எதையும் செய்வார். எனக்கு இப்போ 23 வயசாகுது வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்துக்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டுபன்னனும்.'' என்கிறார் நிக்.


நல்ல பேச்சாற்றாலால் இளைஞர்களை கவர்ந்த நிக்கினின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்த புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்னுமில்லைன்னு சொல்லும் நிக் தான் கைகளற்றவன் கால்களற்றவன் என்று வருந்தப்போவதில்லை என்கிறார்.

அடுத்த தடவை சோதனை மேல் சோதனை என்று நாம் வருந்த முடியாது.



ஜனாதிபதி ஆலோசகர்களுக்கு ரூபா 1.25 கோடி!! தோட்டத்தொழிலாளரின் நாள் சம்பளம் 270 ரூபா !!


இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசாகர்ளாக 38 பேர் கடமையாற்றுகின்றனர்.

அவர்களில் 22 பேருக்கு 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் மாத்திரம் 1,17,29,653,36 ரூபாய் என்கிறார் அரச அமைச்சர் தினேஷ் குணவர்தன.

16 பேர் சம்பளம் பெறாமல் கடமையாற்றுகின்றனர்.( சம்பளம் பெறாமல் இவர்கள் பல சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் ராமசாமி அண்ணே சொல்றார்.)

இந்த ஆலோசகர்ளில் அதி கூடிய சம்பளமாக 60,000 ரூபா வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.

சில ஆலோசகர்களுக்கு நான்கைந்து அரச வாகனங்கள், விமான பயணச்சீட்டுக்கள், அமைச்சர்களை விட உயர்ந்த அந்தஸ்து வழங்கபடுவது உண்மையான்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.


கந்தசாமி விமர்சனம், எந்திரன் எப்ப வரும்? அத்துடன் இன்னும் பல மொக்கை பதிவுகளால் பதிவுலகம் பரபரப்பான தருணத்தில் இவர்களை பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம்.

அரசியல்வாதிகளும்இ சங்கங்களும் பல தடவைகள் தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை தட்டிக்கேட்டாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் தந்திரமான காய் நகர்த்தல்களால்; போராட்டங்கள் சோரம் போன கதை உண்டு ஏராளம்.

பிச்சையெடுப்பவனை விட குறைவாக் உழைக்கும் ஓர் வர்க்கம் ஊதியம் பெறுகிற கொடுமையை எங்க போய் சொல்லுவேன்.(பிச்சைக்காரனை உதாரணமாக்கியதற்கு.....)
இலங்கையில் சராசரி ஊழியர் ஒருவர் பெறும் குறைந்த மாதாந்த சம்பளம் 11700 ரூபா.


நம்மிடம் சாதாரணமாக ஒரு கேள்வி எழுப்புவோம். ஒரு நாளைக்கு நம் செலவு குறைந்தது 500 ரூபாயாவது இருக்காதா? ஆனால் இலங்கையின் அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செலுத்துகிற முக்கியமானவர்களுக்கு நாள் சம்பளமே 270 ரூபாய்தான்.
அவங்களுக்கு அவ்வளவு கொடுக்காதீங்கன்னு சொல்லல,(அத சொல்ல.....)
இவங்களுக்கு இவ்வளவு கொடுங்கன்னு சொல்றேன்.


தெருவிற்கு ஆயிரம் திவ்யாக்கள்.....


திவ்யா என்கிற அழகான சித்திரம் இன்று கடலை கடையில்!
சொல்லப்பட்ட ஒரு உண்மைக்கதை சிந்தித்து எழுதுகிறேன்.

எங்காவது ஒரு மனநல மருத்துவமனையில் தேடிப்பாருங்கள் திவ்யாவின் மனதை...



பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் மனசுக்குள் சிறகடித்துப்பறக்க காலைப் பொழுதில் முதல் நாள் உத்தியோகத்திற்கு செல்ல பஸ் எடுக்கிறாள் திவ்யா. புட்போட் கைப்பிடியை இறுக்கப்பிடித்தவளுக்கு வாழ்க்கையை வாழத்தெரியாமல் போனது வேதனை.

தான் கடமை புரியப்போகும் இடம் அவளுக்குள் ஏற்படுத்திய பிரமிப்பில் தன்னை மறந்து சிந்தித்திருக்க மாட்டாளா?

புதிய இடத்துக்கு வேலைக்கு போகிறோமே !அங்க எல்லாரும் எப்படி இருப்பாங்க, தொழில் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்க மாட்டாளா?

அம்மா அப்பா உறவினர்கள இவர்களை விட நெருங்கி சொந்தம் கொண்டாட திவ்யாவுக்கு யாரும் இல்லை அவள் கடமையின் முதல் நாள் கையொப்பமிடும்வரை.

புதிய அலுவலகம் நண்பர்கள் என தன் வாழ்க்கையில் பல புதிய அத்தியாயத்திற்கான பக்கங்கள் திறக்கப்பட்ட பூரிப்பில் திவ்யாவின் நாட்கள் திறந்தன.

வீடு அலுவலகம் வீடு என வட்டமடித்தவள் மனதின் பாஸ்வார்ட் அறிந்தவன் எவனோ லொக்இன் ஆனதில் தடுமாறிப்போனாள்.

நட்போடு ஆரம்பித்த புதிய உறவு பல படிநிலைகளை கடந்து சினிமா அரங்கு வரை வளர்ந்தது.

இந்த காதல் நாடகத்தில் முழ்கிப்போயிருந்தது திவ்யாவின் மனது.

'' இவளத்தான் கட்டிக்கப்போறேன்'' என்ற போலியான வசனம் தனக்கு ஒரு முகவரி கொடுத்ததாய் நினைத்தவள் ஏமாற்றமடைந்தாள் ரயில் தண்டவாளம் புரண்டதில்.

அலுவலகத்தில் தனித்துப்போனவள் மனதுக்குள் அடக்கி வைத்ததை யாருக்கும் சொல்லவில்லை. தனிமையை விரும்பினாள், சந்தோசத்தை மறந்தாள், கடமையில் கவனம் சிதறியதால் வேலையை விட்டு தூக்கப்பட்டாள்.

இதை விட இழப்பதற்கு ஒன்றுமில்லாதது போல அலுவலக வாயில் கதவருகில் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்களையும் குழி தோண்டி புதைத்துவிட்டு புறப்பட்டது திவ்யாவின் உடல்.

வீட்டிலும் இவள் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாகத்தான் இருந்தன. பெற்றோரிடமும் கதைப்பதில்லை தன் அறைக்குள் இருந்து வெளியே வருவதுமில்லை. தன் மனசுக்குள் இருப்பதை சொல்ல எத்தனித்ததுமில்லை. யாருக்கும் அவள் மனது தெரியாது.

அன்றொரு நாள் அதிகாலைப்பொழுதில் திவ்யாவின் அப்பா கையில் பையுடன் அவசரமாக புறப்படுகிறார். பல நாள் சவரம் செய்யாத முகத்துடன் தான் இறங்க வேண்டிய இடத்தை சொல்லி பஸ் நடத்துனரிடம் டிக்கட் வாங்கிக்கொண்டவர் ஜன்னலோரம் தலையை சாய்த்தார். யோசனைகளில் தன்னை மறந்து இறங்கும் இடத்தையும் மறந்துவிட்டார்.


'' ஐயா மனநல மருத்துவமனை வந்துட்டு இறங்குங்க '' என்றார் பஸ் நடத்துனர்.

ஒபாமாவும் நானும்.




இன்று மின் காந்த அலைகளில் நான் இல்லை. ரொம்ப யோசிக்க வேணாம். வானொலி தொலைக்காட்சி எல்லாத்துக்கும்; இன்னைக்கு ஓய்வு கொடுத்து இயற்கையை சுவாசிக்கிறேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு ஓய்வு. என்ன கொஞ்சம் வேலை இருந்தது இருந்தாலும் ரிலாக்சாக முடிச்சுட்டன்.

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. பதிவுலகில் நான் காணாமல் போன நாட்களில் எத்தனையோ விடயங்கள் நடந்திருக்கும். அப்புறம் நிறைய பேர் விருதுகளெல்லாம் தந்திருந்தீங்க கொஞ்ச கொஞ்சமா தேடிபிடிச்சு ஏத்துக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்கனும். இன்னும் நிறைய பேசுவோம் வரும் ஞாயிறு (23) வலைப்பதிவர் சந்திப்பில்.

கொஞ்ச நாளைக்கு முதல்ல எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதுல இருந்த விடயங்கள முழுமையா படிச்சதுக்கப்புறம் அனுப்பியவருக்கு பதில் மடல் அனுப்பி அந்த உண்மைக் கதையை முழுமையாக தெரிஞ்சிக்கிட்டு எழுதி வைச்சிருக்கேன் ஒரு பதிவு. சில மாற்றங்கள் செய்து விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

அது இருக்கட்டும் அப்பு ஓபாமாவை எதுக்கு கூப்பிட்டீங்க?

அது ஒன்னுமில்ல மனுசன் இப்ப குடும்பத்தோட செம ஜாலியா விடுமுறையில இருக்காரு நானும் இன்னைக்கு விடுமுறை பாருங்க அதுதான்.

பொருளாதாரம், சுகாதாரம், G20 மாநாடு என பல அலுவல்களுக்கு மத்தியில் இப்பதான் ஒபாமா கொஞசம் ஓய்வெடுக்கிறார்.



மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்க ஜனாதிபதி இப்போ இயற்கை தளங்களை பார்வையிடுகிறார். இறுதியாக தன்னுடைய குடும்பத்தாரோடு கிராண்ட் கெனியோன் என்கிற மலைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் ஒபாமா.



கிராண்ட் கெனியொன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய தேசிய பூங்காவும் இங்கேதான் இருக்கிறது.


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டும் தான் பதவியில் இருந்த போது ஓய்வு நேரங்களை அதிகம் கழித்தது கிராண்ட் கெனியொனின் முக்கிய இடங்களில்தான். நம்ம சூப்பர் ஸ்டார் அடிக்கடி இமயமலைக்கு போற மாதிரி அமெரிக்கர்களுக்கு கிராண்ட் கெனியொன்.


இன்னும்.........


நண்பர்கள் மன்னிக்கனும்


பல நாட்கள் கழித்து பதிவுலகை திரும்பிப்பார்க்கிறேன். நலம் அறிய வந்த நண்பர்கள் மன்னிக்கனும். இருந்த வேலைகள் காரணமாகவும் மனக்கவலை காரணமாகவும் பதிவெழுதும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த 24ம் திகதி என் பிறந்ததினத்தை ஞாபகம் வைத்து வாழ்த்துச்சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

துணிச்சலோடு சவாலை சந்திக்க தயாராகிவிட்டேன் நீங்கள் கொடுத்த தைரியத்தால். சந்திக்க சவால்கள் இல்லாமல் போனால் சாதிக்க முடியாமல் போய்விடும்னு அடிக்கடி ராமசாமி அண்ணே சொல்லுவார்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.