ஒஸ்கார் வென்ற எரிச்சல்கள்.

AM 11:30 Hisham Mohamed - هشام 2 Comments

ஒஸ்கார் சென்ற தமிழனுக்கு வாழ்த்துக்கள் கோடி.நீ ஒஸ்கார் சென்றதை விட அதை வாங்கிய பிறகு தமிழில் சொன்ன வார்த்தைகளே உன் தாய்மொழிக்கு நீ கொடுத்த கௌரவம்.


இசைப்புயல் A.R. ரஹ்மான் ஸ்லம் டோக் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் கடந்த ஞாயிறு(22) விருதுகளை பெற்றுக்கொண்டார்.


11 வயதில் தந்தையை இழந்து தன் குடும்பத்தை கரை சேர்க்கும் உன்னத கனவுடன் தன் திறமையை மாத்திரம் நம்பி களத்தில் இறங்கிய ரஹ்மான் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றது மாத்திரமல்லாது. தன் நாட்டிற்கும் தன் தாயக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.


ஒரு தமிழன் வாங்கிய முதலாவது ஒஸ்கார் விருது. ஒஸ்கார் விருது சர்வதேச அளவில் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் ஓர் உயரிய அந்தஸ்து. இது அமெரிக்காவில் கொடுக்கப்படுவதால் அமெரிக்கர்களுக்கான விருதாகுமா?


விருது வென்ற தமிழனுக்கு வாழ்த்துச்சொல்ல பல இந்திய தளங்கள் திட்டமிட்டு செயற்பட்டது வருத்தத்திற்குரியது. ரஹ்மான் ஒஸ்கார் விருது பெற தகுதியுடையவரா? இல்லையா? இதுபோன்ற பல கருத்துக்கணிப்புக்கள்.
என் பார்வையில் இந்த விருதை பெற ரஹ்மான் முழு அளவில் தகுதியானவர்.





ஸ்லம் டோக் இது அவருடைய ஒரு சில ஆங்கில படைப்புகளில் ஒன்று. ஆனால் தமிழில் வெளியான ஆயிரக்கணக்கான படைப்புகளில் அவர் தன் திறமையை நிரூபித்ததற்கு கொடுத்திருக்க வேண்டும் நூற்றுக்கணக்காக ஒஸ்கார் விருதுகள்.


ரஹ்மான் என்கிற மனிதரிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம். விடா முயற்சி, தொழில் மீது கொண்டுள்ள பற்று, உயர்வுகளின்போது காட்டும் தன்னடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


ஒஸ்கார் வென்ற தமிழனை இனி உலகறியும். படைப்புகள் விற்பனையானதில் இசைப்புயல் ரஹ்மான் உலக இசையமைப்பாளர் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். ரஹ்மானின் வயதையும் வேகத்தையும் பார்த்தால் நம்பர் 1 இடத்ததை பிடிக்க ரொம்ப காலம் தேவைப்படாது. இதுவரையில் இவரது அரை பில்லியன் படைப்புகள் விற்பனையாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


ஸ்லம் டோக் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது உண்மை ஆனால் அதை விளக்கப்படுத்தும் அளவுக்கு மும்பை சமூக கட்டமைப்பை நான் அறிந்ததில்லை. படத்தின்படி அங்கே நடக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒஸ்கார் விருதுக்கு பிறகு முன்பு போர்கொடி உயர்த்திய பலரும் இது இந்திய படைப்பு என்று மௌனமானதுமுண்டு. சிலர் இன்னும் இது இந்தியர்களை அவமானப்படுத்தும் படைப்பு என்று பலவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறர்கள்.


காதலன் காதலியை சந்திக்கிறான். காதலன் காதலி பிரிகிறார்கள். காதலன் சோகத்தில் பாடுகிறான். காதலி காதலன் மீண்டும் இணைகிறார்கள். இதுதான் இந்திய சினிமா என்று வர்ணித்த பிரித்தானிய சஞ்சிகைகள் ஸ்லம்டோக விருது வென்ற பிறகு தங்கள் நாட்டு படைப்பென்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.


பாவம் அமெரிக்கர்கள்.பல கோணத்திலிருந்து இவர்களுக்கு பலத்த அடி ஒலிம்பிக் போட்டிகளில் வேகமான மனிதர் அந்தஸ்து தொடங்கி பொருளாதார சரிவு, நிதி நிறுவனங்கள், வாகன உற்பத்தி, வேலையிழப்பு இறுதியாக ஒஸ்காரிலும் சரிவு. இம்முறை ஒரே ஒரு அமெரிக்கர்தான் ஒஸ்கார் விருது வென்றார். இது அமெரிக்க சஞ்சிகைகள் சொல்லும் கதை.

2 COMMENTS:

Sinthu சொன்னது…

they (American) can't do anything.
I wrote about Rahman for my class work, but my teacher didn't know him before. After Slumdog millianiare film, she has known.
She knows Mathangi too.....

RJ Dyena சொன்னது…

gud one ...
vazhthukkal Hish

Dyena