நாட்டையும் மக்களையும் நேசித்த மாதுலுவாவே சோபித தேரர் நவம்பர் 8ம் திகதி தனது 73ஆவது வயதில் காலமானார்.
நல்ல தேசம் வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும், மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று போராடியவர் வெற்றிப்பாதை கண்ட தனது பயணத்தின் ஆரம்பத்திலேயே விடைபெறுவது நாட்டு மக்களுக்கும் நல்ல தலைவர்களுக்கும் மிகப்பெரியதொரு பொறுப்பை விட்டுச்செல்வதாகவே உணர்கிறேன்.
"பிளவுபட்டு நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை 35 வருட கால யுத்தம் யாருக்கும் வெற்றியை தரவில்லை.. இனிமேலும் ஒரு யுத்தம் வேண்டாம். ஒன்று பட்டு வாழ்வதே வெற்றி தரும் இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன" சோபித தேரர்.
மற்றவர் நம்பிக்கைகளை அவமதிக்காமல் ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொடுக்கும் எந்தவொரு மதகுருவும் வரலாற்றுப்பக்கங்களில் அத்தியாயமாக என்றும் வாசிக்கப்படுகிறார்கள்.
நாடு அமைதியிழந்தபோதெல்லாம் ஒற்றுமையை வலியுறுத்திய
சோபித தேரரின் வாழ்க்கை அரை குறையாய் வேதம் படித்து நச்சு விதைக்கும் மதகுருமாருக்கும். மதத்தின் பெயரால் தேர்தல் காலங்களில் வாக்கு பிச்சை கேட்கும் அரசியல் தலைவர்களுக்கும் நல்ல முன்மாதிரி.