தெருவிற்கு ஆயிரம் திவ்யாக்கள்.....

PM 9:05 Hisham Mohamed - هشام 3 Comments


திவ்யா என்கிற அழகான சித்திரம் இன்று கடலை கடையில்!
சொல்லப்பட்ட ஒரு உண்மைக்கதை சிந்தித்து எழுதுகிறேன்.

எங்காவது ஒரு மனநல மருத்துவமனையில் தேடிப்பாருங்கள் திவ்யாவின் மனதை...



பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் மனசுக்குள் சிறகடித்துப்பறக்க காலைப் பொழுதில் முதல் நாள் உத்தியோகத்திற்கு செல்ல பஸ் எடுக்கிறாள் திவ்யா. புட்போட் கைப்பிடியை இறுக்கப்பிடித்தவளுக்கு வாழ்க்கையை வாழத்தெரியாமல் போனது வேதனை.

தான் கடமை புரியப்போகும் இடம் அவளுக்குள் ஏற்படுத்திய பிரமிப்பில் தன்னை மறந்து சிந்தித்திருக்க மாட்டாளா?

புதிய இடத்துக்கு வேலைக்கு போகிறோமே !அங்க எல்லாரும் எப்படி இருப்பாங்க, தொழில் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்க மாட்டாளா?

அம்மா அப்பா உறவினர்கள இவர்களை விட நெருங்கி சொந்தம் கொண்டாட திவ்யாவுக்கு யாரும் இல்லை அவள் கடமையின் முதல் நாள் கையொப்பமிடும்வரை.

புதிய அலுவலகம் நண்பர்கள் என தன் வாழ்க்கையில் பல புதிய அத்தியாயத்திற்கான பக்கங்கள் திறக்கப்பட்ட பூரிப்பில் திவ்யாவின் நாட்கள் திறந்தன.

வீடு அலுவலகம் வீடு என வட்டமடித்தவள் மனதின் பாஸ்வார்ட் அறிந்தவன் எவனோ லொக்இன் ஆனதில் தடுமாறிப்போனாள்.

நட்போடு ஆரம்பித்த புதிய உறவு பல படிநிலைகளை கடந்து சினிமா அரங்கு வரை வளர்ந்தது.

இந்த காதல் நாடகத்தில் முழ்கிப்போயிருந்தது திவ்யாவின் மனது.

'' இவளத்தான் கட்டிக்கப்போறேன்'' என்ற போலியான வசனம் தனக்கு ஒரு முகவரி கொடுத்ததாய் நினைத்தவள் ஏமாற்றமடைந்தாள் ரயில் தண்டவாளம் புரண்டதில்.

அலுவலகத்தில் தனித்துப்போனவள் மனதுக்குள் அடக்கி வைத்ததை யாருக்கும் சொல்லவில்லை. தனிமையை விரும்பினாள், சந்தோசத்தை மறந்தாள், கடமையில் கவனம் சிதறியதால் வேலையை விட்டு தூக்கப்பட்டாள்.

இதை விட இழப்பதற்கு ஒன்றுமில்லாதது போல அலுவலக வாயில் கதவருகில் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்களையும் குழி தோண்டி புதைத்துவிட்டு புறப்பட்டது திவ்யாவின் உடல்.

வீட்டிலும் இவள் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாகத்தான் இருந்தன. பெற்றோரிடமும் கதைப்பதில்லை தன் அறைக்குள் இருந்து வெளியே வருவதுமில்லை. தன் மனசுக்குள் இருப்பதை சொல்ல எத்தனித்ததுமில்லை. யாருக்கும் அவள் மனது தெரியாது.

அன்றொரு நாள் அதிகாலைப்பொழுதில் திவ்யாவின் அப்பா கையில் பையுடன் அவசரமாக புறப்படுகிறார். பல நாள் சவரம் செய்யாத முகத்துடன் தான் இறங்க வேண்டிய இடத்தை சொல்லி பஸ் நடத்துனரிடம் டிக்கட் வாங்கிக்கொண்டவர் ஜன்னலோரம் தலையை சாய்த்தார். யோசனைகளில் தன்னை மறந்து இறங்கும் இடத்தையும் மறந்துவிட்டார்.


'' ஐயா மனநல மருத்துவமனை வந்துட்டு இறங்குங்க '' என்றார் பஸ் நடத்துனர்.

3 COMMENTS:

கண்ணீர் வரச் செய்து விட்டது ஹிஷாம் ..... நல்ல ஒரு வாழ்க்கை கதை. சிலருக்கு நிச்சயம் இது படிப்பினையாக அமையும்....

(அது சரி, அந்த படத்துல இருக்குறது?............... லொள்....)

வாழ்த்துக்கள் ஹிஷாம்......

Sinthu சொன்னது…

இது உண்மை தான், இப்படி பல திவ்யாக்கள் இருக்கிறார்கள். காரணம் தேடித் பிடிக்க முடியாத பல உண்மைகள் இப்படித் தான் மறைக்கப் படுகின்றன..

ilangan சொன்னது…

// அலுவலகம் வீடு என வட்டமடித்தவள் மனதின் பாஸ்வார்ட் அறிந்தவன் எவனோ லொக்இன் ஆனதில் தடுமாறிப்போனாள்.//

காலத்திற்கேற்ற உவமிப்பு.
தங்களின் ரெம்பிளேட்டும் என் ரெம்பிளேட்டும் சேம் சேம்.