ஆபத்தான ஆடுகளம்.

AM 12:44 Hisham Mohamed - هشام 13 Comments

இன்று (27.12.2009) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தொலைக்காட்சி ரசிகனாக மாறி ஏமாந்த கதை! ஒரு ஊடகவியலாளன் ரசிகனாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் நல்ல ஊடகவியலாளனாக வர முடியும். இன்று ஒரு நாள் முழுமையாக மாறிப்பார்த்தேன்.

ஒரு சில வேலைகள் மட்டுமே இருந்ததால் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டியை ரசிக்கலாமென்று முதல் நாளே யோசித்திருந்தேன். வருடத்தின் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்படும்னு யார் நினைச்சா? நேந்து விட்ட ஆடு விஜய் படத்தை பார்க்க போற மாதிரி இப்போட்டி முடிவு தீர்மானிக்கப்பட் ஒன்று. ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இருந்தாலும் ''அது போன வாரம்'' ன்னு வடிவேலு ஸ்டைல்ல எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு தைரியமா பாக்கலாம்னு உட்கார்ந்தால் முதலாவது பந்திலே போல்ட் செய்யப்பட்டார் தரங்க. டில்சான் ஜயசூரிய இருந்த நம்பிக்கையில் உறுதியாக அமர்ந்திருந்தேன். மிட் நைட் மசாலா சிக்கலுக்கு நான்காவது போட்டியில் துப்புக் கொடுத்த இருவரும் இந்த போட்டியிலும் சொதப்பிருவாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற. அதாங்க நான்காவது போட்டிக்கு முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை இரவு விடுதியில் ஆடிப்பாடிவிட்டு வந்ததா சொன்னாங்களே. அந்த படங்கள் வலையுலகில் வட்டமடிப்பதாய் அறிந்தேன்(ஆர்வமுள்ளவங்க தேடிப்பாருங்க).

கூப்பிட்டு அடிக்கிறீங்களே நியாயமா?

தில்சான் சனத் இருவரும் சந்திந்த பந்துகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. இருவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் காயமில்லாமல் பந்து உடம்பில் பட்டு வேதனை கண்டது வருத்தம் தந்தது.

ஐயோ அம்மா இனி இந்த பக்கமே வரமாட்டேன்டா சாமி!

இலங்கை அணியின் விக்கட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கியது. 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது தான் ஆடுகளம் தன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுப்பதில் சிரமப்பட்டதை தொடக்கத்தில் அவாதானிக்கக் கூடியதாய் இருந்தது. ஆடுகளத்தில் பதிகிற பந்து வழக்கமாக மேலெழும்பும் அளவை விட உயரமாக வந்ததால் 23ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. க்ளைமெக்ஸில் போட்டி நடுவர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எல்லாருமா கூடி என்னோட ஞாயிற்று கிழமை உல்லாசத்துக்கு கும்மியடிச்சிட்டாங்கப்பு. கொல்டா ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு ஆபாத்தானதாக கருதி போட்டி கைவிடப்பட்டது.


இந்தியா தோத்துப்போனா வீரர்கள் வீட்டுக்குத்தான் கல்லடிப்போம் இப்பதான் மைதானத்துக்கு அடிக்கிறோம். ஐ ஜாலி!

கொல்டா மைதானம் மோசமான ஆடுகளம் என்று பல முறை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபரில் நடந்த செம்பியன்ஸ் லீக் போட்டியின் போதும் கவுதம் கம்பீர் இம்மைதானத்தை விமர்சித்திருந்தார்.

இந்த லட்சனத்துல 2011 உலகக்கிண்ண போட்டி இங்கும் நடக்குமாம். அடுத்த சர்வதேச போட்டித் தொடர்களுக்கு முன் இந்திய கிரிக்கட் சபை மைதான ஓழுங்கமைப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தினால் நல்லது இல்லைன்னா திடீர்ன்னு கரன்ட் கட்டாகிடும்.

+++++

தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்றிக்கொண்டிருந்தேன். திடீர்னு பாத்தா ஏதோ வாக்கு வாதம் நடந்துகிட்டிருக்கு. ரிமோட் கொன்ரோலை உட்கார வைச்சிட்டு வேடிக்கை பார்த்தேன். (எங்க வீட்ல கேபிள் TV கிடையாது)


நட்சத்திர பாடகர் தெரிவாம். ஒருத்தர் பாடுறாரு அப்புறம் நிகழ்ச்சி நடத்துறவரு நடுவர் கிட்ட கேள்வி கேட்குறாரு அதுவும் எடக்கு முடக்கான கேள்வி. குறித்த ரெண்டு பேருல யாரு தெரிவாகுவாங்க? sms முடிவு வேற மாதிரி சொல்லுதே. அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு?
நியாயமான கேள்வி. பாட்டு பாடுற நடுவர் ஐயா உங்க பதிலுக்கு பிறகு தானே புரிஞ்சது உங்க ட்ராமா.(இந்த படத்த ஏற்கனவே நாங்க பாத்துட்டோம்ல) ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)
வருந்தத்தக்க அணுகு முறை.
இப்படித்தான் பர்வையாளர்களை அதிகரிக்கனுமா? போட்டியாளர்களும் நடிகர்களா இருக்க மாட்டாங்களான்னு என்ன உறுதி?
முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒரு போட்டியா இருக்க வாய்ப்பில்லையா? sms அனுப்புகிறவர்கள் முட்டாள்களா?
நடுவர்களாக வந்தவர்கள் இலங்கை பாடகர்களா அல்லது நடிகர்களா? (நடிக்க வந்த பாடகர்களா, பாட வந்த நடிகர்களா? குழப்பமா இருந்தா விட்டுறுங்க)
இதுவும் ரொம்ப ஆபத்தான ஆடுகளம் இல்லையா?

ஏற்கனவே இந்த மாதிரியான நாடகத்தை தமிழகத்தின் அலைவரிசைகள் அரங்கேற்றி மூக்குடைந்த கதை உலகறிந்த விடயம். ஒரு அலைவரிசை சிம்ரனையும் இன்னுமொரு அலைவரிசை சிம்புவையும் வாடகைக்கு அமாத்தியது எங்களுக்கு தெரியாதா. தயவுசெய்து தொலைக்காட்சி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். சந்தையை பிடிக்க இதைவிட பல நல்ல வழிகள் இருக்கின்றன.

இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம்.

13 COMMENTS:

அஸ்பர் சொன்னது…

ஏன் அடிக்கடி பதிவுகள் எழுதுவதில்லை.
எப்பிடியோ தொல்வியில இருந்து தப்பிட்டம்..

கிடுகு tool bar எப்படி சேர்ப்பது?

EKSAAR சொன்னது…

நானும் அந்த கேலிக்கூத்தை பார்த்தேன்.. அதற்கு முன் மின்னிய நிகழ்ச்சியிலும் நிறைய கேலிக்கூத்துக்கள். சின்ன புள்ளத்தனமா இருந்துச்சு..

இந்த கஷ்டத்திலிருந்து எம்மை காக்க யாரும் இல்லையா?

இதே வகையான விளம்பர உத்திகளைத்தான் இந்திய கிரிக்கட்டும் கையாள்கிறது என்பது வருத்தமான உண்மை

பொதுவாக நான் இந்த பாட்டு போட்டியை பார்ப்பதில்லை. இருந்தும் நேற்று அக்கம் பக்கம் பாடிய மொழிதாண்டிய கலைஞருக்காக கொஞ்சம் பார்க்கவேண்டும்.

மெகா ஸ்டார் இலும் விரைவில் இவ்வாறான முரண்பாட்டைக்கொண்டுவந்து
பிரபல்யம் உண்டாக்கவே மேர்வின் கூட இணைக்கப்பட்டுள்ளார் என நான் கணிக்கிறேன்..

////அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு? ///

///ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)///

நிறைய நிகழ்ச்சிகளை தானே அவர்கள் copy பண்ணுவார்கள். இப்போது சொற்களையும் copy பண்ண ஆரம்பித்து விட்டார்களா?....

அடிக்கடி வானொலியில் விளம்பரம் செய்யும் போதே நினைத்தேன். எதோ ஒரு உள்ளாட்டம் நடக்கப் போகுதென்று. உங்கள் பதிவுக்குப் பிறகு தெரிந்து விட்டது இது தான் நடந்திருக்கும் என்று....

அருமையாக இருந்தது உங்கள் பதிவு..... வாழ்த்துக்கள் ஹிஷாம்....

Unknown சொன்னது…

சரியாக சொன்னீர்கள் போங்கள், அந்த மாதிரியான நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலை கட்டி இருந்தாலும், அரைத்த மாவை திருப்பி அரைப்பது ரசிக்கதக்க விடயமாக இல்லை.
மேலும் சனத், தில்ஷன் பற்றிய வலை பதிவுகளை உங்களிடம் இர்ருந்து எதிர்பார்கிறேன்.....

-Mr.TH

சுபானு சொன்னது…

//
இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம். //

ஆகா.. இதுதானே உள்க்குத்து என்கின்றது.. ;)

Thenammai Lakshmanan சொன்னது…

ஹிஷாம் இதுலயும் காப்பி பேஸ்டா

நான் தொலைக் காட்சியே பார்ப்பதில்லை இதனாலேயா

Hisham Mohamed - هشام சொன்னது…

அஸ்பர் எழுத ஆசைதான் என்ன செய்வது வேலையும் சோம்பலும் என்னை ஜெயிச்சிடுதே!

Hisham Mohamed - هشام சொன்னது…

வருகைக்கு நன்றி என்ன கொடும சார், சப்ராஸ், thenammailakshmanan.

Hisham Mohamed - هشام சொன்னது…

MR.TH ஐயையோ ஆள விடுங்கோ!

Hisham Mohamed - هشام சொன்னது…

உள்குத்துன்னா என்ன சுபானு?

அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன் நீங்கள் சொல்லுமளவுக்கு எந்த தரக்குறைவும் இருக்கவில்லை நண்பரே,
நீங்கள் வசந்தம் டிவி இல் அர்ச்சனாவுடன் நடாத்தும் அந்த சின்னப்புள்ளத்தனமான நிகழ்சியைவிட அது எவ்வளவோ மேல் நண்பரே, சும்மா சும்மா சிரிப்பதும், அப்புறம், அப்புறம் என்று அறுப்பதும் ஒரு நிகழ்சியை எப்படி சுவாரசியமாக்குவது என்று தெரியாத சிறு பிள்ளை தனங்களின் அடையாளம், உங்கள் வசந்தம் குழுமத்திலேயே நல்ல திறமை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டு கொஞ்சம் கற்றுக்கொண்டால்
நீங்கள் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள் முதலில் நீங்கள் நடத்தும் நிகழ்சியை ஆரோக்கியமானதாக
செய்ய முயற்சி செய்யுங்கள் பின்னர் அடுத்தவரின் குறைகளை அலசலாம்... உண்மையை சொல்லப் போனால் உங்கள் அறுவல் பொறுக்கல்ல ....

Hisham Mohamed - هشام சொன்னது…

வருகைக்கு நன்றி நாச்சியாதீவு பர்வீன்,

திறமையுள்ளவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள என்றுமே நான் பின்நிற்பதில்லை.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கருப்பொருட்கள் இருக்கின்றன. சில நிகழ்ச்சிகள் சீரியஸாக செய்யனும் இன்னும் சில மொக்கை போடனும் இதை இன்னும் விரிவாக விளக்கலாம்.(இப்போ நேரமில்லை)

மொக்கை போட்டு அறுக்கிற நிகழ்ச்சியை சீரியஸா செய்தல் எடுபடாது...

உங்களுக்கு என் நிகழ்ச்சியை விமர்சிக்கிற உரிமை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு ஒரு ரசிகனாக நானும் விமர்சிப்பதில் தவறிருக்காது.

அன்பின் ஹிசாம்!

உண்மைதான், ஒவ்வொருவருக்கும் ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமையுள்ளது . உங்கள் பக்குவம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது மெய்யிலே இந்த பக்குவத்தையும்
அடக்கமான பதிலையும் நான் எதிர்பார்க்க வில்லை நண்பனே..எனது விமர்சனம் உங்களை
பாதித்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் உங்களின் திறமைகள் மீது எனக்கு
கருத்து பேதம் இல்லை ஒரு ரசிகனாக உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமாய்
அந்த நிகழ்ச்சியை நான் எதிர் பார்ப்பது தவறா? ஹிஸாம்........0771877876.