ஜனவரி 28, ஏன்பா ஜன்னல் ஓரத்துல கறுப்பு நிறத்துல என்ன அது?

PM 9:47 Hisham Mohamed - هشام 6 Comments

இதே போல ஒரு ஜனவரி 28ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.

வெற்றி FM இல் நான் இணைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஜனவரி 28ம்திகதிதான் வெற்றியில் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டேன். சிகரங்கள் உருவான இலங்கை வானொலிக்கு குட்பாய் சொன்னாலும் அங்கே எனக்கு ஒலிபரப்பை கற்றுக்கொடுத்தவர்களை அன்போடு ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். வெற்றி நிகழ்ச்சிகளை அவ்வப்போது அவர்கள் கேட்டுவிட்டு என்னை வாழ்த்தவும் திருத்தவும் மறப்பதில்லை.

என் ஒலிபரப்பு வாழ்க்கையில் முக்கியமான நாள் ஜனவரி 28ம்திகதி 2008. 99.6 FM பண்பலையின் பரீட்சார்த்த ஒலிபரப்பை நடத்திய வெற்றி வானொலியில் முதல் நாள் கடமையை சந்தோசமாக ஆரம்பித்தேன்.

காலைப்பொழுது நிறுவனத் தலைவரிடமிருந்து வெற்றி வானொலியின் உதவி முகாமையாளராக பொறுப்பேற்றுக்கொண்டேன். அவர் வெற்றி வானொலியின் நோக்கங்களை தெளிவாக விளக்கியதற்கு பிறகு நிறுவன அதிகாரிகள் அறிமுகம் என்று வழமையான நிறுவன நடைமுறைகள். அன்று நான கடமையில் இணைந்த போது எமது நிறுவனத்தில் கிட்டத்தட்ட 90 பேர் பணிபுரிந்தார்கள். ஆனால் இப்பொழுது 150 ஜ தொடுகிறது பணியாளர் எண்ணிக்கை. அப்பொழுது வெற்றி வானொலிக்காக யாரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சில வாரங்கள் வரை நான் பம்பரம் போல சுழல வேண்டி இருந்தது. ஒரு வானொலிக்கு இருக்க வேண்டிய எந்தவொரு விடயமும் இருக்கவில்லை கலையகம், ஒலிவாங்கி என்று ஆரம்பித்து பட்டியலிடலாம். அதன் பிறகு பல நியமனங்கள் உருவாகி வெற்றிக்குழு உருவானது. ஆரம்பித்ததிலிருந்து எம்மோடு இணைந்திருக்கும் அறிவிப்பாளர்களுக்கும் நேயர்களுக்கும் வெற்றியின் ஒவ்வொரு வளர்ச்சி படியும் நன்கு புரியும். வெற்றி வானொலி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை கொண்டாட இருக்கும் இந்த தருணத்தில் அதன் வெற்றியில் கைகோர்த்து நிற்கும் அன்பான நேயர்களை என்றும் மறப்பதற்கில்லை. ஆரம்பித்த நாட்களில் இருந்தே வெற்றி வானொலியை நேசிக்கும் அன்பு உள்ளங்கள் உலகெங்கிலும் இருக்கிறர்கள்.

கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நண்பர்களின் வாழ்த்துக்களோடு என் பணி தொடர இறைவன் அருள் புரிய வேண்டும்.


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


நான் தேநீரில் மிதந்த மாலைப்பொழுதில் அம்மா ஒரு கதை சொன்னாங்க. ஒரு வயது முதிர்ந்த அப்பா தன் மகன் லெப்டொப்பில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்ததை பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்பா என்கிற அந்தஸ்து வந்த பிறகு தன் மகன் தான் அனுபவித்த துயரங்களில் ஒரு துளியேனும் அனுபவிக்ககூடாது என்று எண்ணுகிறவர். தோளுக்கு மேல வளர்ந்தாலும் அவன் வீடு சேரும் வரை அந்த அப்பாவிற்கு இருக்கிற ஏக்கத்தையும் தவிப்பையும் அப்பா என்று நீங்கள் அழைக்கப்படும் போது தான் உணரமுடியும். கதைக்கு வாங்க தீடீரென்று ஜன்னலோரத்தில் ஏதோ ஒன்று கறுப்பு நிறத்தில் அமர்ந்தது போல கண் பார்வை இழந்த அந்த அப்பா உணர்ந்தார். உடனே மகனிடம் '' ஏன்பா அது என்ன ஜன்னலோரத்துல'' என்று கோட்டார். மகன் ''காகம்'' என்று முதல் முறை பதில் சொன்னானாம். காது கேட்கும் திறனை இழந்ததால் மீண்டும் அந்த தந்தை '' ராஜா அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல:'' என்று கேட்க கொஞ்சம் சினம் கொண்டவனாய் ''காகம் '' என்று அழுத்தி பதில் சொன்னான். மீண்டும் சொற்ப நேரத்தில் அந்த தந்தை '' மகன் அது என்ன கறுப்பு நிறத்துல ஜன்னல் ஓரத்துல'' என்று கேள்வி எழுப்ப பெரும் கோபத்துடன் அந்த மகன் '' ஜயோ அப்பா அது காகம் காகம்'' என்று கத்தத் தொடங்கினான். இருந்தும் அந்த தந்தைக்கு ஜன்னலோரத்துல கறுப்பு நிறத்துல இருக்கிறது என்னவென்று புரியவில்லை. நடந்தவற்றை சமையலறையில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்த தாய் ஒரு பழைய டயரியுடன் அந்த மகனை நோக்கி வந்தாள். அந்த அம்மா மகனை பார்த்து '' இதுல பெப்ரவரி 10ம் திகதியை திருப்பிப்பார்'' என்று சொன்னதும் காற்றில் பறந்த காகிதங்கள் 10ம் திகதியில் போய் நிற்க அதில் அந்த தாய் எழுதியிருந்தது. ''மூத்தவன் கதைக்க ஆரம்பித்து ஒரு சில வாரங்கள். அவனுக்கு ; அம்மா, ப்ப்பா, என்னது என்று தெரிந்தது ஒரு சில வார்த்தைகள்தான். அன்று என் கணவர் ஜன்னலோரத்தில் என் செல்லக்குட்டியை தூக்கிக்கிட்டு நின்று கொண்டிருந்தபோது ஒரு காகம் ஜன்னலோரத்தில் அமர்ந்தது அப்போ மகன் அவரிடம் 28 தடவைகள் அது என்ன? அது என்ன? அது என்ன, என்று கேள்வி கேட்டான். ஒரு தடவைக்கூட சலிப்பு தட்டாதவறாய் சிரித்துக்கொண்டே காகம் என்று பதில் சொன்னார்''.


வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல சின்ன வயசுல நாங்க நடந்து கொள்கிற விதம் வயது போக போக எங்களை தொற்றிக்கொள்ளும். வயதானவர்கள் குழந்தை போலன்னு சொல்லுவாங்க. ஒரு தொழிலுக்கான நேர்முகப்பரீட்சைக்கு போனால் எத்தனை வருட அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. அதுமட்டுமல்ல எந்த ஒரு துறைக்கும் பலரும் கேட்கும் முதல் விடயம் அனுபவம். ஒரு கட்டத்துக்கு மேல அனுபவமும் வாழ்க்கைக்கு உதவாமல் போகிற கொடுமை அது முதுமை. என்னதான் பத்து பிள்ளைகளை பெத்து வளர்த்திருந்தாலும் பல பெண் பிள்ளைகளை கரை சேர்த்து ஒரு குடும்பத்தையே முதுகில் சுமந்திருந்தாலும். தாத்தா என்று பேரப்பிள்ளைகள் உங்களை அழைக்கும் போது நீங்கள் குழந்தை மாதிரி.

வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 27ம் திகதி...

PM 12:25 Hisham Mohamed - هشام 2 Comments

இதே போல ஒரு ஜனவரி 27ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.



பொதுவாக வாரஇறுதி நாட்களிலும் போயா விடுமுறை தினங்களிலும் இலங்கையின் தலைநகரமும் பிரதான வீதிகளும் பாழடைந்து போயிருக்கும். அந்த ஞாயிற்றுக்கிழமை என் நினைவுகளில் இருந்து நீங்காத இடம்பிடித்து விட்டது. நல்ல நண்பர்களோடு உருவான நட்புக்கு விடை சொல்வதென்பது அவ்வளவு இலகுவான விடயமில்லை. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு உருவான 4 வருட நட்புக்கு பிரியாவிடை கொடுக்கப்போகிற நாள்.

புதிய வானொலியில் என் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு புறப்பட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. என்னதான் உறுதியோடு நான் முடிவெடுத்திருந்தாலும் என் உள் மனதில் போவதா இல்லையா என்ற பெரும் போராட்டம். 99.6 FM இன் பரீட்சார்த்த ஒலிபரப்பில் இளையராஜாவின் அஜந்தா படப்பாடல்களை ரசித்தவண்ணம் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தை வந்தடைந்தேன்.

வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடனான இரண்டு மணிநேர சந்திப்பின் நிறைவில் 99.6 FM பண்பலை என் வாழ்க்கையின் இலட்சியப் பயணத்தின் ஓர் இலக்கை அடைய உதவியது.. 'நாளை 28ம் திகதி உத்தியோகபூர்வமாக கடிதம் கிடைக்கும் வரை யாரிடமும் என் சந்தோசத்தை நான் பகிர்ந்து கொள்ள முடியாது ' இது நண்பர்களுக்கு 27ம் திகதி நான் சொன்ன பதில். அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இலங்கை வானொலியில் கடமை அறிவிப்பாளர்களை தவிர வேறு யாரும் வந்திருக்கவில்லை.

அன்று மதியம் 1 மணிக்கு இலங்கை வானொலியின் சன்டே சூப்பர் ஹிட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாரானபோது இருந்த சந்தோசம் விடைபெறும்போது இருக்கவில்லை. 3 மணிக்கு நான் உணர்ந்து கொண்ட பிரிவின் வலியை சொல்ல யாரும் இருக்கவில்லை. பல சிகரங்களை உருவாக்கிய தமிழ் ஒலிபரப்பின் முன்னோடியை விட்டுப்பிரிய என் மனம் பெரும் பாடுபட்டது. ஒலிபரப்பின் படிநிலைகளை நான் கற்றுக்கொண்ட அந்த கலையகம், 4 வருடங்களுக்கு மேலாக பழகிய நண்பர்கள், அவர்களுடன் அரட்டை அடித்த சிற்றுண்டிச்சாலை, அறிவிப்புச் செய்ய ஆரம்பித்த அந்த ஒலிவாங்கி, பாடல்களையும் இசையையும் படித்த தெற்காசியாவின் முதற்தர இசைக்களஞ்சியம், வேதனைகளை சொல்லி அழும் மாமரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்ப துன்பம் இரண்டும் கொண்ட வாழக்கைப்பயணத்தில் நான் கடந்து வந்த பாதை ரொம்பவும் குறுகியது. இன்னும் பல மைல் தூரம் நான் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு இறைவனின் ஆசியும் உங்கள் பங்களிப்பும் எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

புதிய பயணத்திற்காக ஒரு வெள்ளை நிற சேட் ஒன்றை மாலை வேளையில் வாங்கிக்கொண்டேன். நல்ல முயற்சிகள் சந்தோசமான பொழுதுகள் என்றால் வெள்ளை நிற சேட் அணிவது எனக்கு சென்டிமன்ட்.

28ம் திகதி ஜனவரி 2008ம் ஆண்டு நான் கடமையில் இணையப்போகிறேன்.
(தொடாரும்.)
பி.கு - கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 26ம் திகதி...

PM 12:18 Hisham Mohamed - هشام 3 Comments

இதே போல ஒரு ஜனவரி 26ம் திகதி ஆனால் 2008ம் ஆண்டு.



இலங்கை வானொலியில் சில வலிகளும் குறைகளும் இருக்கலாம். ஆனால் அது
என்னைப் பொறுத்தமட்டில் எனக்கொரு பள்ளிக்கூடம்.


பெரும் குழப்பத்தில் 2008ம் ஆண்டு 26ம் திகதி சனிக்கிழமை காலைப் பொழுது புலர்ந்தது. இருந்த எல்லா வேலைகளையும் ரத்துச் செய்து விட்டு வீட்டில் முடங்கிக்கிடந்தேன். ஒலிபரப்புத்துறையில் கடும் முயற்சிகளுக்கு பிறகு கொழும்புக்கு நான் காணக்கொண்டு வந்த கனவுகளில் ஒன்று நிறைவேறும் சந்தோசத்திலும் என் மனதில் பெரும் சோகம் குடிகொண்டிருந்தது. இலங்கை வானொலியில் சில வலிகளும் குறைகளும் இருக்கலாம். ஆனால் அது என்னைப் பொறுத்தமட்டில் எனக்கொரு பள்ளிக்கூடம். அறிவிப்புத்துறையில் அ ஆ மட்டுமல்ல தொலைக்காட்சி, விளம்பர உலகம் என பரந்துபட்ட ஊடகத்துறையில் நடக்க பழகிக்கொண்டதும் அங்கேதான்.
பதிய முடியாத சில வருத்தங்களால் மாறுதலின் தேவையை உணர்ந்தேன்;(பதிவுலகும் ஊடகத்துறையும் நானும் பதிவில் வரும்). அம்மாவையும் அப்பாவையும் இறுதி வரை சமாளிக்க முடியாமலே போயிட்டு. மறைந்த என்னுடைய மதப்போதகர்(ஹஸரத்) கொடுத்த தைரியமான வார்த்தைகளால் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். இவர் மதகுரு மட்டுமல்ல என் நெருங்கிய நண்பர். சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். நான் ஊடகத்தில் நுழைந்தது முதல் வெற்றி இல் இணைந்து கொண்டது வரை என் உயர்வுகளிலும் சரிவுகளிலும் எனக்கு ஆலோசனை தந்தவர்.

''புத்தம் புது காத்துதான் என்ன வா வான்னு அழைக்கிறதே''

அன்றைய தினம் கேட்கும் எல்லா பாடல்களிலும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. முக்கியமாக கண்ணாமூச்சி ஏனடா படத்தில் ''புத்தம் புது காத்துதான் என்ன வா வான்னு அழைக்கிறதே'' பாடல். ஒரு மாதரியாக மாலை வேளையில் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது. அப்போது வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அடுத்த நாள் 27ம் திகதி ஞாயிற்றுகிழமை காலை நிறுவனத் தலைவரை வந்து சந்திக்கும்படி. உறுதியோடு புதிய பயணத்திற்கு தயாரானேன். இரவு இலங்கை வனொலியின்(தென்றல்) கட்டுப்பாட்டாளர் என் நிலை அறிய அழைப்பினை ஏற்படுத்தினார். 28ம் திகதி நான் விலகப்போவதை அவரிடம் உறுதிப்படுத்தினேன். கேட்டுக்கொண்டிருந்தவர் ஞாயிற்றுகிழமை 1 மணியிலிருந்து 3 மணிவரை நிகழ்ச்சி செய்ய முடியுமா என்று கேட்டார். இலங்கை வனொலியில் செய்யப்போகிற கடைசி நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கெண்டேன்.
ஜனவரி 27ம் திகதி நிறைய அலுவல் இருந்தது......
(தொடரும்)

வெற்றிப்பயணத்தில் ஒரு வருடம் எப்படி போச்சுன்னு தெரியல ஜனவரி 25ம் திகதி........

PM 2:36 Hisham Mohamed - هشام 2 Comments

இதே மாதிரி ஒரு ஜனவரி 25ம் திகதி ஆனால் அது 2008ம் ஆண்டு.




வெள்ளிக்கிழமை மாலை 2.30

ஜனவரி 25ம் திகதி 2008ம் ஆண்டு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில முக்கியமான ஒரு நாள். இலங்கை வானொலியில் மாலை 3மணி நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவர் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் தலைவர் என்று அப்போது எனக்கு தெரியாது. புதிதாக தனியார் வானொலி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் என்னை அதில் இணைந்து கொள்ளும் படியும் அவசரமாக அழைப்பு விடுத்தார். என்ன செய்வது ஏது செய்வதென்று ஒன்னுமே புரியல ஏன்னா தனியார் FM இலிருந்து வருகிற இரண்டாவது அழைப்பு இது ஏற்கனவே ஒரு வானெலியில் அழைத்திருந்தார்கள் அங்கே முக்கியமான தலைகள் என் சம்பளத்தை நிர்ணயிக்கிறதுக்காக ஆட்டோ காரர் கிட்ட பேரம் பேசுவது போல ஆயிரம் ஆயிரத்து ஜநூறுன்னு ஏத்தி ஏறக்கினதுல இனிமேல் தனியார் வானொலிகள் பக்கம் தலை வச்சும் படுக்கிறது இல்லன்னு முடிவெடுத்திருந்தேன்.

வெள்ளிக்கிழமை மாலை 7.00



வெள்ளிக்கிழமை மாலை 7 மணி இருக்கும் புதுசா கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு கார் வாங்கியிருந்தேன். அதுல அந்த ஒலிபரப்பு நிறுவன தலைவரை சந்திக்கிறதுக்கு போனேன். அப்போ அந்த புதிய வனொலி FM 99.6 இல் பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்திருந்தது. பாட்டு மட்டும்தான் ஒலிபரப்பாகும் அதுவும் போன பாட்டே திரும்ப திரும்ப போகும். அதுல ஒரு பாட்டு அஜந்தா படத்துல 'எங்கே இருந்தாய் இசையே' என்று அந்த பாட்டு என்ன வா வான்னு கூப்பிடுவது போல ஒரு உணர்வு. இது உத்தியோக பூர்வமான சந்திப்பு இல்லைனாலும் என் வாழ்க்கையில இது முக்கியமான திருப்பு முனைங்கிறது ஜனவரி 27ம் திகதிதான் எனக்கு புரிஞ்சுது.

வெள்ளிக்கிழமை மாலை 7.30

வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் வரவேற்பரையில் நிறுவனத்தின் தலைவரை சந்திக்கும்போது கிட்டத்தட் 7.30மணி இருக்கும். என்னை பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்ட அவரு வனொலியில என்ன மாதிரியான பொறுப்பு கொடுத்தா செய்வீங்கன்னு திரும்ப திரும்ப கேட்டாரு நானும் என்னால முடிஞ்ச விடயங்களை எடுத்துச் சொன்னேன். ஒரு 15 நிமிட கலந்துரையாடலின் பிறகு மனசுக்குள் பல போராட்டங்களோடு புறப்பட்டேன். அதுவரை புதிய தமிழ் வானொலியில் யாரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை அந்த பயம் வேற ஒரு பக்கம். இன்னுமொரு புறம் எனக்கிருந்த இன்னுமொரு வருத்தம் ஒலிபரப்பின் ஆரம்ப காலத்தில் நான் தத்தி தவழ்ந்து முட்டி மோதி வந்த இலங்கை வானொலியை எப்படி மறப்பது என்பதுதான்.

துர்க்கமில்லாத நீளமான ராத்திரியில் இதுவா அதுவா என்ற போரில் கொஞ்சம் கண் அயர்ந்தேன்.

நளை 26ம் திகதி..............
(தொடரும்)

பி.கு - கடவுளுக்கு பிறகு நான் நன்றி சொல்லவேண்டியவரை பெயரளவிலும் குறிப்பிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

பலஸ்தீன சோகக்கதைகள்.

PM 11:10 Hisham Mohamed - هشام 2 Comments

எட்டு வருட தீவிரவாதத்தின் ஓய்வில் மனிதம் விழித்திடுமா மரணிக்குமா? இறைவன் எழுதும் புதிய பதிவில் பல புதிய காதாப்பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. இந்த பதிவு ஏழைகளின் விடிவுக்கானதா? யுத்தத்தின் முடிவுக்கானதா? விடை தேடும் புதிய பயணம் இன்று (20ம் திகதி) ஆரம்பமாகிறது.

யுத்தம் கொடூரமானது. இதை வார்த்தைகளாலும் செய்திகளினாலும் உணர்ந்த எங்கள் செவிகள் உண்மைச்சம்பவங்களை அறியும் போது அதன் கொடூரத்தன்மையை நன்கு உணர்வதுண்டு.


17ம் திகதி காலைப்பொழுதில் பலஸ்தீன வைத்தியர் ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் இழந்துவிட்டு பித்துப்பிடித்தது போல கதறி அழுத கொடூரத்தை தொலைக்காட்சி செய்தி வெளியட்டது.

வைத்தியர் அபு அல் அஷி வித்தியாசமான மனிதர். பலஸ்தீனில் பிறந்திருந்தும் இவர் கடமை புரிவது இஸ்ரேலிய வைத்தியசாலையில். சம்பவ தினத்தில் தன்னுடைய குடும்பத்தாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளை காஸாவில் உள்ள இவர் இல்லத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. செய்வதறியாது செய்திச் சேவை ஒன்றை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் இவர் கதறியது
'' என் இறைவா என் இறைவா'', '' உதவி செய்ய யாரும் இல்லையா''
என்றுதான்.

உடனே தொலைக்காட்சி ஊடகவியலாளர் குறித்த வைத்தியரின் இடத்தை அறிந்து கொண்டு உதவி செய்ய முற்பட்டதில் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் உதவியோடு பலஸ்தீனிய அம்யூலன்ஸ் வண்டி அவ்h இடத்தை அடைந்தது. இறுதியில் கோரத்தாண்டவத்திற்கு தன் மூன்று குழந்தைகளை பலி கொடுத்தவர் துடி துடித்துக் கொண்டிருந்த தன் ஒரு குழந்தையை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார்.

யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்த தினத்தில் நடந்த கொடுமை இது. இஸ்ரேலிய மக்களுக்காக தொண்டு புரிந்த வைத்தியர் மனிதத்தை நேசித்தார் இருந்தும் என்ன பயன்? இதுதான் சமாதானமா?

இன்னும் 90 சதவீதமான இஸ்ரேலியர்கள் யுத்தத்தை ஆதரிக்கிறார்கள். 22 நாட்களாக உத்தியோகபூர்வமாக நடந்த யுத்தத்தில் பலியான பலஸ்தீன அப்பாவிகள் ஆயிரத்திற்கும் மேல்.......

மரணம் என்கிற முடிவின் போது ஞாபகப்படுத்தப்படுகிறான்.

செய்திச் சேவையின் வீடியோ காட்சி

நீர் மூழ்கி கப்பல் போட்டி 2009

PM 9:14 Hisham Mohamed - هشام 9 Comments

உலகில் முதன் முறையாக நடந்த நீர் மூழ்கி கப்பல் போட்டியில் நீல நிற நீர் மூழ்கி கப்பலை முந்தி இம்முறை கருப்பு நிற நீர் மூழ்கி கப்பல் சாம்பியன் பட்டம் வென்றது.











ராமசாமி அண்ணே இன்னும் கப்பல தேடுறீங்களா??

ரொம்ப நாளாக ஒரு டக்கால்டி வேலை பார்க்கணும்னு ஒரு ஆசை சாரி போஸ்.
பார்த்தவங்க யாரும் வெளியில சொல்ல மாட்டிங்களே?????
கப்பலை பார்த்தவர்கள் மறக்காமல் பின்னூட்டம் போடவும்

புஷ்ஷின் அமெரிக்காவில் அதிகம் பிரயோகிக்கப்பட்ட சொற்கள்.

PM 11:32 Hisham Mohamed - هشام 0 Comments

மன்னன் புஷ்ஷின் ஆட்சி முடிகிறது.

மாமன்னன் புஷ் 8 வருட கொடுங்கோல் ஆட்சியில் அதிகம். பயன்படுத்தியது எந்த சொல்லை ?

இந்த முகிற்கூட்ட சொற்களை நன்கு அவதானித்து பாருங்கோ கடந்த 12மாதங்களிலும் அமெரிக்காவின் மாநிலங்களின் உத்தியோகபூர்வ உரைகளிலும் மாமன்னன் பயன்படுத்திய சொற்கள் இவை.

புஷ் எட்டு சந்தர்பங்களில் நிகழ்த்திய உரைகள் ஆராயப்பட்டன. அவற்றில் பொதுவாக நம்ம ராமசாமி அண்ணே கூட பாவிக்கிற in, on, of, many, also என்கிற சொற்கள் நீக்கப்பட்டன.

தீவிரவாதம் என்கிற சொல்லோடு ஆரம்பிக்கப்படட ஆட்சி....


அட்டவணையோடு வெளியிட்ட சில விடயங்கள்.
இந்த நிறக் கோடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லை குறித்து நிற்கின்றன. ஆட்சி ஆரம்பமானதே தீவிரவாதம், எதிரிகள், ஆப்கானிஸ்தான் என்கிற சொற்களோடுதான்.

9\11 தாக்குதல்

9\11 தாக்குதல் கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்கா உரைத்த சொற்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2002 ம் ஆண்டு ஆரம்பத்தில் அதிக தலைவலியை கொடுத்த ஆப்கானிஸ்தான் தொடர்நது ஆண்டின் இறுதியில் ஈராக்கை இலக்கு வைத்து தீவிரவாதம் என்கிற சொல்லுக்கு இன்னும் அதிகமாக விளம்பரம் கொடுக்கப்பட்டது. புஷ்ஷின் அமெரிக்கா 2006ம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கிற்கு கொடுத்த விளம்பரம் 9\11 தாக்குதலின் பின்னர் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கொடுத்ததைவிட அதிகம்.

மக்கள் மீது புஷ்ஷின் அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.


அமெரிக்காவை தலை குனிய வைத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு புஷ்ஷுக்கு உண்டு.
பொருளாதாரம் என்றாலே வரி என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருமளவிற்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரத்தை போலவே பொருளாதாரம் என்ற சொல்லின் பயன்பாடும் பல சரிவுகளை கண்டது.

சமூகத்தை மறந்து போன மாமன்னன்.


ஆட்சியின் ஆரம்ப உரைகளை தொடாந்து சமூகம் தொடர்பான சொற்களின் பாவனை குறைந்தது என்பதை விட மறந்து போனது என்பதே மிகப்பொருந்தும்.2001ம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் அதிகம் பிரயோகிப்பட்ட சிறுவர்கள் மற்றும் சுகாதாரம் என்ற சொற்கள் பிந்நாட்களில் பல சரிவுகளை சந்தித்தன.

இன்னும் ஒரு சில தினங்களில் மாமன்னன் நடித்த பல படங்கள் திரையிடப்படும் இல்லையென்றால் அவை ரீமேக் செய்யப்படும்.

புள்ளி விபரம் - C - Span